சேறைக் கவிராச பிள்ளை

தமிழ்ப் புலவர்

கவிராச பிள்ளை என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் சேறைக் கவிராசன் என்றும் போற்றப்படுகிறார். இந்தப் பெயரை இவர் தன் உலாக் கண்ணியிலேயே குறிப்பிட்டுள்ளார்.[1] இவர் கருணேசன் [2] மரபினர்.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த வீரை கவிராச பண்டிதன் என்பவர் சௌந்தரிய லகரி என்னும் நூலை இயற்றியுள்ளார். இவரிலிருந்து வேறு பிரித்துக்கஃ காட்டவே இவர் தம்மைச் ‘சேறைக் கவிராசன்’ எனக் கூறிக்கொண்டார். சேறை என்னும் ஊர் திருச்சேறை என வழங்கப்படும் திருமால் பதி.[3]

அதிவீரராம பாண்டியருக்கு இவர் எழுதி அனுப்பியதாக ஒரு சீட்டுக்கவி பாடல் உண்டு. எனவே இவரது காலம் அந்த அரசன் வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு எனத் தெரிகிறது.

இவரால் பாடப்பட்ட நூல்கள்:

என்பன.

இவரை ஆதரித்த வள்ளல் திருகாளத்தியை சேர்ந்த வேங்கடராச செங்குந்த முதலியார்.[4]

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. செவி ராசியம் கடந்த சேறைக் – கவிராசன்
    சொன்ன உரை படித்துத் சோதி பெறத் தாலாட்டி
  2. கணக்கர் என்னும் கருணீகர்
  3. தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் சாரநாதப் பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் உள்ளன.
  4. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh6jZpy.TVA_BOK_0007898/page/100/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேறைக்_கவிராச_பிள்ளை&oldid=3189240" இலிருந்து மீள்விக்கப்பட்டது