சைனிக் பள்ளி அமராவதிநகர்

அமராவதி சைனிக் பள்ளி என்பது இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் ஒன்று ஆகும். இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தப் பள்ளியானது இந்திய மத்தியஅரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து உண்டு உறைவிடப் பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்குப் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2021 ஆண்டு காலகட்டத்தில் அமராவதி சைனிக் பள்ளியில் 655 மாணவர்கள் பயில்கின்றனர்.

வரலாறு தொகு

அமராவதி நகர் சைனிக் பள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதியாக 16 ஜூலை 1962 இல் தொடங்கப்பட்டது. இது 1975 வரை சைனிக் பள்ளி, மெட்ராஸ் (எஸ்.எஸ்.எம்) என அழைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சைனிக் பள்ளி, உருவாக்கப்பட்டது. என்.டி.ஏ (என்.டி.ஏ இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது ). இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே பள்ளிக்குள் நுழைய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

சேர்க்கை தொகு

இந்தப் பள்ளியில் சேர ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6ஆம் வகுப்பில் சேர, 10இல் இருந்து 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் (ஆண்கள் மட்டும்) சேர 13- இருந்து 15 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. இந்தப் பள்ளியில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றும், நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணைய தள முகவரியை பார்வை இடவும் https://aissee.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P#

இந்தப்பள்ளியில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடும் பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[1]

நோக்கம் தொகு

பள்ளியின் நோக்கம் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகும்.

பள்ளி வண்ணங்கள் மற்றும் இலச்சினை தொகு

பள்ளியின் வண்ணங்களாக சாம்பல் மற்றும் இரத்த சிவப்பு வண்ணங்கள் உள்ளன. சாம்பல் என்பது வலிமையையும், சிவப்பு நிறம், கடமை மீதான பக்தி மற்றும் தோழமையைக் குறிக்கிறது. பள்ளி இலச்சினையில் உள்ள வாள்கள் வீரத்தையும் மற்றும் விளக்கு அறிவு மற்றும் ஞானத்தையும் குறிக்கிறது. கோபுரம் தமிழகத்தின் கலாச்சாரத்தையும் மேன்மையையும் குறிக்கிறது.

வளாகம் தொகு

இந்திரா காந்தி தேசிய பூங்காவின் பள்ளத்தாக்கில் 240 ஏக்கர் (0.97 கிமீ 2) பரப்பளவில் இப் பள்ளி வளாகம் உள்ளது. எல்லா பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த வளாகம் அமராவதி அணையின் பின்னணியில் காணப்படுகிறது.

பள்ளி குறித்த பிற தகவல்கள் தொகு

  • என்.டி.ஏ-வில் சேருவது பெரும்பாலான மாணவர்களின் லட்சியமாகும். அதனால் இப் பிரிவில் பணி செய்ய விரும்பும் மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.
  • மூன்று படைகளுக்கும் ஒரே போட்டித் தேர்வின் மூலம் என்.டி.ஏ தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து தேர்வு வாரியம் நடத்தும் நேர்காணல் மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
  • இப்பள்ளியின் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திறந்த முறையில் நடத்தப்படுகிறது.

பணிபுரியும் ஆசிரியர்கள் தொகு

இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களின் துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் கல்வியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது சராசரி கல்வித் தகுதியாக உள்ளது. பாடசாலையின் கூடுதல் / இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் பணியாளர்களும் உதவுகிறார்கள். மூத்த ஆசிரியராக கணித ஆசிரியர் திரு எஸ். பால்ராஜ் உள்ளார். அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் அல்லது அமராவதிநகரில் வசிக்கின்றனர்.

திரு. பி. சந்திரன் (வேதியியல் ஆசிரியர்) மற்றும் திரு.ஏ.சௌந்திரராஜன் (இணை உயிரியல் ஆசிரியர்) ஆகிய இருவரும் சிறந்த ஆசிரியருக்கான விருதை முறையே 2011 மற்றும் 2013ம் ஆண்டில் குடியரசுத் தலைவரிடமிருந்து இதுவரை 6 ஆசிரியர்கள் தேசிய விருது பெற்றுள்ளனர்.

பள்ளி கல்வி வளாகத்தில் ஹார்வர்ட் / டெக்சன் டி -6 வார்பேர்டு பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் மட்டும் (சிறுவர் மற்றும் சிறுமியர்) நாள் தோறும் வீட்டிலிருந்து வந்து படிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அமர் சைனிக் தொகு

சைனிக் ஊழியர்களின் குழந்தைகளுக்கு உதவுவதற்கும் அருகிலுள்ள கிராம மக்களுக்கு உதவுவதற்கும் 1975 ஆம் ஆண்டில் அமர் சைனிக் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடைமுறைக்கு வந்தது. இது சுமார் 50 குழந்தைகளுடன் தொடங்கியது. இப் பள்ளியில் தற்போது சுமார் 250 குழந்தைகள் (200 சிறுவர்கள் மற்றும் 50 சிறுமியர்)படிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. எம்.நாகராஜன் (25 திசம்பர் 2018). "போராட்டக் குணத்தைக் கற்பிக்கும் சைனிக் பள்ளி!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2018.

வெளி இணைப்புகள் தொகு