ஜான்சிவாலா இலட்சுமண் ராவ்
இலட்சுமண் ராவ் (Lakhsman Rao) (1904-1959) இவர் ஜான்சியின் மன்னர் கங்காதர் ராவ் மற்றும் ராணி இலட்சுமிபாய் ஆகியோரின் வளர்ப்பு மகனான, தாமோதர் ராவின் மகனாவார்.
ஜான்சிவாலா இலட்சுமண் ராவ் | |
---|---|
பிறப்பு | இலட்சுமண் ராவ் 1904 |
இறப்பு | 1959 (அகவை 54–55) |
தனது முன்னோர்களின் நிலமான ஜான்சியின் நினைவாக ஜான்சிவாலா என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். இவர் ஒரு துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்து, இந்தோரில் தட்டச்சு செய்பவராக பணியாற்றினார். [1][2][3] 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சுதந்திரப் போரில் பங்களித்த இவரது பாட்டி ராணி இலட்சுமிபாயின் நினைவாக 1957 மே 10 அன்று நடைபெற்ற விழாவில் உத்தரபிரதேச அரசு இவருக்கு ஒரு பட்டயமும், பண விருதையும் வழங்கியது. [3][2] இவர் 1959 இல் இறந்தார். கிருஷண் ராவ் மற்றும் சந்திரகாந்த் ராவ் என்ற இரண்டு மகன்கள் இவருக்கு இருந்தனர். [3][2]
மேற்கோள்கள் தொகு
- ↑ Henry Soszynski (1906-05-28). "JHANSI". Members.iinet.net.au. Archived from the original on 10 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.
- ↑ 2.0 2.1 2.2 "Jhansi honours its Rani's descendents". Timesofindia.indiatimes.com. 2015-12-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.
- ↑ 3.0 3.1 3.2 "The fate of Damodar Rao, the Son of Rani Lakshmi Bai of Jhansi after the war". Cbkwgl.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.