ஜெயராஜ்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

ஜெயராஜ் (Jayaraj) என்று தொழில்ரீதியாக அழைக்கப்படும் ஜெயராஜன் ராஜசேகரன் நாயர், ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். மலையாளத் திரையுலகில் பணியாற்றி வரும் இவர் பறவைகள் சங்க சர்வதேச நிறுவனத்தை நிறுவியவர் ஆவார், மேலும் அவர் தொண்டு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

ஜெயராஜன் ராஜசேகரன் நாயர்
பிறப்புஜெயராஜ் ராஜசேகரன் நாயர்
4 ஆகத்து 1960 (1960-08-04) (அகவை 63)
கோட்டயம், கேரளம், இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1990– முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சபிதா ஜெயராஜ்
பிள்ளைகள்2

ஆரம்ப வாழ்க்கை தொகு

ஜெயராஜ் கேரளாவிலுள்ள ,கோட்டயத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஆகஸ்ட் 4, 1960 இல் பிறந்தார். அவரது தந்தை என். ராஜசேகரன் நாயர் மற்றும் தாய், சாவித்ரி ஆர் நாயர் ஆவார். திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் தனது இளங்கலை தொழில்நுட்பத்தை முடித்தார். திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தபோது கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். திரைப்பட விழாவில் பல உலகத் திரைப்படங்களை கவனித்தார்.[1]குரோசவாவின் ரஷ்மோன் மற்றும் டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் ,போன்ற படங்கள் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தின.[2] திருவனந்தபுரத்தில் தனது படிப்பை முடித்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் அவரது சகோதரியின் அண்டை வீட்டாராகக் குறிப்பிடப்பட்ட இயக்குனர் பரதனை சந்தித்தார்.

தொழில் தொகு

ஜெயராஜினால் இயக்குனர் பரதன் ஈர்க்கப்பட்டார். அதனால் அவரை சிலம்பு (1986) என்கிறஅவரது படத்தில் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார். ஜெயராஜ் பின்னர் இயக்குனர் "பரதனுக்கு மேலும் ஆறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஓரு மின்னாமினுங்கிட்டெ நூருங்குவேத்தம் (1987) மற்றும் வைஷாலி (1988) ஆகியவை அடங்கும். ஜெயராஜ் வித்யாரம்பம் (1988) திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவரது ஆரம்ப தொழில் வாழ்க்கையில் முக்கியமாக ஆகாஷா கோட்டையில் சுல்தான் (1991), ஜானி வால்கர் (1992), ஹை வே (1995), தும்புலி கடப்புரம் (1995) மற்றும் அரேபியா (1995) போன்ற வர்த்தக ரீதி சார்ந்த திரைப்படங்களை தயாரித்தார்.

அவரது ஆரம்ப கால வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படங்களாக "குடும்பசமேதம் (1992) பைத்ருகம் (1993) மற்றும் சொப்னம் (1993) போன்றவை இருந்தன. பைத்ருகம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது, ஆனால் அதன் பழமைவாத, சமய தத்துவத்திற்காக விமர்சிக்கப்பட்டது. தேசதனம் (1997) திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக இருந்தது. இத் திரைப்படத்தினால், அவர் விமர்சகர்களால் தீவிரமான திரைப்படத் தயாரிப்பாளராகக் கருதப்பட்டார். அதற்குப் பிறகு மற்றொரு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான கலித்தியம் (1997) ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோவின் தழுவலாகும். இது அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது.

விருதுகள் தொகு

ஜெயராஜ் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கிரிஸ்டல் பியர் விருது, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் பீகாக் விருது, கேரள மாநில சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் க்ரோ பெசண்ட் விருது , திரைப்பட விமர்சகர்களின் சர்வதேச கூட்டமைப்பின் எப்.ஐ.பி.ஆர்.இ.எஸ்.சி.ஐ. விருது, சர்வதேச சம்மேளன சம்மேளனத்தின் சர்வதேச கூட்டமைப்பின், டான் குவிஜோட் விருது, ஆசிய சினிமா மேம்பாட்டிற்கான நெட்வொர்க் விருது மற்றும் கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு குறிப்பு விருது, மற்றும் 7 முறை தேசிய திரைப்பட விருது, பலமுறை கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றவர் ஆவார். அவரது படங்களில் குறிப்பிடத்தக்கவையாக, தேசதனம் (1996), களியாட்டம் (1997), கருனம் (2000), சாந்தம் (2001), தெய்வனமதில் (2005), வெள்ளபோக்கத்தில் (2007), ஒட்டாள் (2015), வீரம் (2017) மற்றும் பயனகம் (2018) போன்றவை ஆகும்.

குறிப்புகள் தொகு

  1. "cinemaofmalayalam.net: சுயவிவரம்". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  2. "Jayaraj: A director's profile". Rediff.com movies. December 20, 2005. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயராஜ்&oldid=3584810" இலிருந்து மீள்விக்கப்பட்டது