ஜெயவதி நரசிம்மன்

ஜெயவதி நரசிம்மன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சமூக அமைப்புகளோடும், மகளிர் சங்கங்களோடும், தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பொதுப் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர். இவர் இரா. நரசிம்மன் என்பவருடன் சேர்ந்து எழுதிய "பெற்றால் மட்டும் போதுமா?" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயவதி_நரசிம்மன்&oldid=3614049" இலிருந்து மீள்விக்கப்பட்டது