ஜோதி சிங் (Jyoti Singh)(பிறப்பு 1 அக்டோபர் 1966) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.[1]

ஜோதி சிங்
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2018
பரிந்துரைப்புதீபக் மிசுரா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1966 (1966-10-01) (அகவை 57)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

பணி தொகு

சிங் தில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இதன் பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் முன்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். இவர் 2011-இல் மூத்த வழக்கறிஞரானார். சிங் இந்தியா அரசு சார்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.தில்லி உயர்நீதிமன்றச் சட்ட சேவைகள் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். 22 அக்டோபர் 2018 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. ""This profession does not come to you on a platter"- Justice Jyoti Singh". TheLeaflet (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  2. "CJ And Sitting Judges". delhihighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_சிங்&oldid=3894803" இலிருந்து மீள்விக்கப்பட்டது