டீன்குமார்

(டீன் குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டீன்குமார் இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், நாடக இயக்குனர் ஆவார்.

நாடகங்களில் தொகு

டீன்குமார் ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் கலையும் கண்ணீரும் என்ற நாடகத்தில் நடித்தார்.[1] அடுத்து தினகரன் நாடக விழாவில் மனித தர்மம் என்ற நாடகத்தை இயக்கி மேடையேற்றினார். பின்னர் அக்கினிப் பூக்கள், ஒரு மனிதன் இரு உலகம், ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.[1]

திரைப்படங்களில் தொகு

1975 ஆம் ஆண்டில் வி. பி. கணேசன் தயாரித்த புதிய காற்று திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். டீன்குமார் வில்லனாகத் தோன்றிய இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.[1] அதன் பின்னர் தென்றலும் புயலும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் தெய்வம் தந்த வீடு, நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவள் ஒரு ஜீவநதி படத்தில் நடித்தார்.[1]

தமிழ் தவிர சுது ஐயா, ஒந்தட்ட ஒந்தாய், தங்க கொல்லோ ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார்.[1]

நடித்த திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 தம்பிஐயா தேவதாஸ். "இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள்". வீரகேசரி. 30 ஆகத்து 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீன்குமார்&oldid=3281950" இலிருந்து மீள்விக்கப்பட்டது