தஞ்சாவூர் பஜனைசாலை விட்டோபா கோயில்

தஞ்சாவூர் பஜனைசாலை விட்டோபா கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கீழ ராஜ வீதியில் அமைந்துள்ளது.

பஜனைசாலை விட்டோபா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:விட்டோபா (கிருஷ்ணன்)

தேவஸ்தான கோயில் தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

அமைப்பு தொகு

அரண்மனையின் எதிரே இக்கோயில் உள்ளது.[3] இக்கோயில் மகாராட்டிரம்|மராட்டிய மாநிலம்]] பண்டரிபுரம் விட்டோபா கோயிலின் வழிபாட்டு நெறியில் காணப்படுவதாகும். இடுப்பில் கை வைத்துக்கொண்டு செங்கல் மேல் நிற்கின்ற கண்ணன் அருகே இரு தேவியர்கள் காணப்படுகின்றனர். 1819ஆம் ஆண்டு மார்ச் முதல் நாள் மகாசிவராத்திரி நாளில் இக்கோயில் இரண்டாம் சரபோசி மன்னரால் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. [4] நுழைவாயில், மண்டபம், மூலவர் விமானம் உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறம் வலப்புறம் விநாயரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர்.

மூலவர் தொகு

மூலவர் விட்டோபா (கிருஷ்ணன்), பாமா ருக்மணியுடன் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.39
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.39
  3. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் நூல்
  4. குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, பக்.162