தியேன்குங்-1

தியேன்குங்-1 (Tiangong-1) என்பது மக்கள் சீனக் குடியரசின் முதலாவது விண்வெளி ஆய்வுகூடம் ஆகும். இவ்வாய்வுகூடம் லோங் மார்ச் 2F/G என்ற ஏவுகலன் மூலம், 2011, செப்டம்பர் 29 அன்று ஏவப்பட்டது. இது தியேன்குங் விண்வெளி-நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு நிரந்தரமான ஆட்களுடன் கூடிய விண்வெளி நிலையம் ஒன்றை 2020 ஆம் ஆண்டுக்குள் அமைப்பது சீனாவின் நோக்கம் ஆகும்.

தியேன்குங்-1
Tiangong-1
(天宫一号)
தியேன்குங் (இடது) சென்சோ விண்கலத்துடன் இணைவு (வரைவு)
தியேன்குங் (இடது) சென்சோ விண்கலத்துடன் இணைவு (வரைவு)
நிலையத் தரவுகள்
பயணிகள்:3
ஏவப்பட்டது:செப்டம்பர் 29, 2011
ஏவப்பட்ட இடம்:ஜியூக்குவான்
நிறை:8,506 கிகி
நீளம்:10.4 m (34.1 அடி)
விட்டம்:3.35 m (11.0 அடி)
தற்போதைய கனவளவு:15 கனமீட்டர்
தியேன்குங்-1
Tiangong-1
(天宫一号)

2011 இன் இறுதியில் சென்சோ-8 என்ற ஆளில்லா விண்கலம் இந்த ஆய்வுகூடத்துடன் இணைப்பதற்காக ஏவப்படவுள்ளது. இரண்டு விண்கலன்களை இணைக்கின்ற சீனாவின் முதலாவது நடவடிக்கை இதுவாக இருக்கும். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டில் தியேன்குங்-1 உடன் இணைவதற்காக சென்சோ-9, சென்சோ-10 போன்ற ஆட்களுடன் கூடிய விண்கலங்களையும் அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியேன்குங்-1&oldid=3216200" இலிருந்து மீள்விக்கப்பட்டது