திருக்கண்டீச்சரம் பசுபதீசுவரர் கோயில்

திருக்கண்டீச்சரம் பசுபதீசுவரர் கோயில் (கொண்டீச்சரம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனு வழிபட்ட தலம் எனப்படுகிறது. இத்தலத்தில் உமை பசு வடிவில் தன் கொம்பால் பூமியைக் கிளறி இறைவனைத் தேடியபோது குருதி பெருகி இறைவன் வெளிப்பட பசு தன் பாலையே அவர் மீது பொழிந்து புண்ணை ஆற்றியது என்பது தொன்நம்பிக்கை.

இவற்றையும் பார்க்க தொகு