திருக்குறள் ஆய்வு நூல்களின் பட்டியல்

நூல்

திருக்குறள் ஆய்வு நூல்கள் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெயரால் அறியப்படுகின்ற திருக்குறள் பற்றி அறிஞர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள நூல்களைக் குறிக்கும்.

உரை நூல்கள் தொகு

திருக்குறளை ஆய்கின்ற நூல்களுள் முதலிடம் பெறுபவை உரை நூல்கள். இத்தகைய உரை நூல்களுள் 10ஆம் நூற்றாண்டிலிருந்தே எழுதப்பட்ட பழைய உரை நூல்களும் அதன் பின்னர் எழுந்த புதிய உரை நூல்களும் அடங்கும்.

பல வகை உரைகள் தொகு

திருக்குறளுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளின் வகைகளை முனைவர் கு. மோகன ராசு கீழ்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்:[1]

  • பொழிப்புரைகள்
  • பதவுரைகள்
  • ஒரு வரி உரைகள்
  • விளக்க உரைகள்
  • கருத்துரைகள்
  • குறள் தொடர்ந்த கருத்துரைகள்
  • பொழிப்புரை கருத்துரைகளின் தொகுப்புகள்
  • உரைகளின் தொகுப்புரைகள்

ஆய்வு நூல்கள் தொகு

மேற்கூறிய உரைவகைகள் தவிர திருக்குறளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற எண்ணிறந்த நூல்கள் குறிப்பாக 20-21ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில:

ஆதாரம் தொகு

  1. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005