திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்

மாகறல் - திருமாகறலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]

தேவாரம் பாடல் பெற்ற
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருமாகறல்
பெயர்:திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருமாகறல்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருமாகறலீசுவரர், உடும்பீசர், புற்றிடங்கொண்டார், அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், பாரத்திழும்பர், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், அகத்தீசுவரர், பரிந்து காத்தவர், தடுத்தாட் கொண்டவர்,[1]
தாயார்:புவனநாயகி,திரிபுவன நாயகி
தல விருட்சம்:எலுமிச்சை
தீர்த்தம்:அக்கினி தீர்த்தம்(குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம் தொகு

இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள் தொகு

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 40
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள் தொகு