துடுப்பாட்டத்தின் வரலாறு

கிரிக்கெட்

பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் அறிந்த வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து தான் அதாவது 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலகட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, தொழில்ரீதியில் காமன்வெல்த் நாடுகள்]] எங்கும் விளையாடப்பட்டு வருகின்றது.

ஆரம்பகால கிரிக்கெட் தொகு

பிறப்பிடம் தொகு

கிரிக்கெட் எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.இது யாராலும் அறியப்படாத ஒரு உண்மை ஆகும். கிரிக்கெட் எப்படி தோன்றியது என்பதற்கு எந்த வித பலமான ஆதாரமும் இல்லை.என்றாலும், இந்த விளையாட்டு சாக்சன் அல்லது நார்மன் காலத்தில், வேல்ட் என்ற அடர்ந்த காடுகள் மற்றும் சம வெளிகளில் (இங்கிலாந்துக்கு தென் மேற்கு பகுதி மற்றும்கென்ட், சயாதுக்சுக்கு அருகில்) வாழ்ந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. இடைக்காலங்களில் வேல்ட் பகுதியின் மக்கள் சிறு வேளாண்மைத் தொழிலிலும், உலோகப் பொருட்களை கொண்டு வேலை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டுவரை பெரிதும் குழந்தைகள் விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட், இந்த நூற்றாண்டில் பெரியவர்களாலும் விளையாடப்பட்டது.[1].

குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிர்க்கெட் விளையாட்டு, பல தலைமுறைகளுக்கு அவ்வாறே இருந்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரியவர்கள் இந்த ஆட்டத்தை ஆடினார்கள் என்று நம்மால் கேள்விப்பட முடியவில்லை. பவுல்ஸ் மிக பழமை வாய்ந்த ஆட்டம் என்பதால், கிரிக்கெட் பவுல்சில் இருந்து பிறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. ஒரு பந்து அதன் இலக்கை அடைவதற்கு முன்னர் மட்டையை வைத்திருக்கும் ஒருவன் அதனை தடுத்து இலக்கில் இருந்து தள்ளிப்போகும் அளவுக்கு அந்த பந்தை இந்த ஆட்டத்தில் அடிக்கவேண்டும். ஆடு மேயும் இடங்களிலும், சம வெளிகளிலும் விளையாடப்பட்டு வந்த இந்த ஆட்டம், ஆரம்பத்தில் செம்மறி ஆட்டிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிளி உருண்டைகளை பந்தாகக் கொண்டும், (அல்லது ஒரு கல் அல்லது இரு சிறிய மரத்துண்டு); ஓர் குச்சி அல்லது ஒரு வளைந்த கோலைக் கொண்டோ அல்லது பண்ணையில் இருக்கின்ற ஒரு கருவியை மட்டையாக பயன்படுத்தி விளையாடினர்; மற்றும் முக்காலி, ஒரு மரத்ததண்டு, வாயிற்கதவு (எ.கா., விக்கெட் கேட்) ஆகியவற்றை விக்கேடாக பயன்படுத்தினர்.[2].

"கிரிக்கெட்" என்ற பெயர் வந்ததன் காரணம் தொகு

"கிரிக்கெட்" என்ற சொல்லுக்கு நிறைய மூலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த ஆட்ட வரலாற்றில் அதாவது 1598 ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு,(கீழே பார்க்கவும் ) கிரேக்கேட் என்று அழைக்கப்பட்டது. இடைக்கால டச் மொழியில் கிரிக் (-எ ), என்ற சொல் குச்சி என்ற பொருள் தரும்; மேலும் தொன்மை ஆங்கிலத்தில் கிரிக் அல்லது க்ரைசி ஊன்று கட்டை அல்லது கம்பு என்ற பொருளைத்தருகின்றது.[2]டெரெக் பர்லே, அ சோசியல் ஹிஸ்டரி ஆப் இங்கிலீஷ் கிரிக்கெட் , ஆரம், 1999</ref>. கிரிக்ஸ்டேல் என்ற இடைக்கால டச் சொல், நீண்ட குறைந்த உயர முக்காலிகளைக் குறிக்கிறது. இவை தேவாலயங்களில் முட்டிப்போட்டு வேண்ட உதவியாக இருந்தன. இந்த முக்காலியைப் போலவே இரண்டு தண்டுகள், விக்கெட் வீழ்த்த ஆரம்ப கிரிக்கெட்டில் உபயோகப்படுத்தப் பட்டது.

போன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஹெயனர் கில்மெய்ச்டார் என்ற மொழியியலாளர்,"கிரிக்கெட்" இடைகால டச் மொழி மெட் தே (க்ரிக் கேட்)சென் (அதாவது, "குச்சி துறத்தலை கொண்டு "), என்ற சொல்லை கொண்டு உருவானது என்று குறிப்பிடுகிறார். இது ஆட்டத்தில் உள்ள டச் தொடர்பை குறிக்கிறது. இன்னொரு வழியில் பார்க்கப்போனால் கவுண்டி ஆப் பிளான்டர்ஸ், டச்சி ஆப் பர்கண்டி உடன் வணிக தொடர்பு கொண்டிருந்த போது இடைக்கால டச் [3] சொற்கள் தென் கிழக்கு இங்கிலாந்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[4].

ஆதாரப்பூர்வமான முதல் குறிப்பு தொகு

 
கில்போர்டில் உள்ள தி ராயல் கிராம்மர் ஸ்கூலில் ஜான் டெரிக் க்ரேக்கட் ஆடினார்.

இதற்கு முன்னர் ஏகப்பட்ட குறிப்புகள் இருந்தாலும், 1598 ஆம் ஆண்டு ஒரு பள்ளியில் இருந்த ஒரு நிலத்தின் மேல் இருந்த உரிமை பிரச்ச்சனையாயால் எழுந்த சட்ட வழக்கு மூலம் இந்த ஆட்டத்தை பற்றிய குறிப்பு அதிகாரப்பூர்வமாக முதல் முதலில் பதிவாகி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பகுதியில் அவரும் அவரது நண்பர்களும், அவர் பள்ளியில் க்ரேக்கட் விளையாடியதாக ஒரு 59 வயதான ஜான் டெறிக் சாட்சியம் அளித்தார், இவர் இறப்புகளை பரிசோதனை செய்யும் ஒரு ஆய்வாளர். இந்த பள்ளி ராயல் கிராம்மர் ஸ்கூல், கில்ட்போர்ட் ஆகும், மேலும் திரு. டெறிக்கின் சாட்சியம் இந்த விளையாட்டு சர்றேவில் 1550 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருங்கின்றது என்று ஐயம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.[5].

முதன் முதலில் பெரியவர்கள் விளையாடியதாக இருந்த குறிப்பு 1611 ஆம் ஆண்டைக் காட்டியது. சச்செக்சில் இரண்டு பேர், தேவாலயத்துக்கு செல்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததாக பதிவாகி இருந்தது.[6]. அதே ஆண்டில், கிரிக்கெட் பற்றி இருந்த அகராதி குறிப்பு அதனை சிறுவர்களின் விளையாட்டு என்று குறிப்பிடுகின்றது. இதனால் கிரிக்கெட் பெரியவர்களால் ஒரு சிறு காலத்திற்கு முன்னர் தான் விளையாட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.[5].

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் தொகு

கிரிக்கெட் பெரியவர்களால் விளையாடப்பட்டது என்பதை குறிக்க ஆங்கிலேய உள்நாட்டுப் போர் வரை நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆட்டம் சமய தலைவர்கள் வட்டாரத்தில் விளையாடப்பட்டது என்பதை சொல்கின்ற குறிப்புகள் இந்த ஆட்டம் மாவட்ட ரீதியாக விளையாடப்பட்டது என்பதை குறிக்க மறுக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த ஆட்டத்தை மையமாகக் கொண்டு ஆடிய தீவிர சூதாட்டங்களைப் பற்றியும் எந்த வித குறிப்பும் இல்லை. இதனால் பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை கிராமங்களில் மட்டுமே கிரிக்கெட்ஆடப்பட்டது என்றும் மாவட்டங்களில் கிரிக்கெட் ஆடப்படவில்லை என்றும் கருத்தில் கொள்ளப்படுகிறது.[1]

பொதுநலநாடுகள் தொகு

1648 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிந்தவுடன் புதிய புனிதர்களின் அரசாங்கம் சட்ட ஒழுங்கில்லாத கூட்டுகளை ஒடுக்கியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது கால்பந்து போன்ற விளையாட்டுகளை அடியுடன் ஒடுக்கியது. இதற்கு முன்னர் இருந்ததை விட ஓய்வு நாளை ஒழுங்கான முறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சட்டங்களைக் கொண்டுவந்தது. கீழ் தள மக்களுக்கு ஓய்வு நாள் மட்டும் தான் எஞ்சிய நாளாக இருந்தது. ஆதலால் இந்த பொதுநல நாடுகளில் (காமன் வெல்த்) கிரிக்கெட்டின் ஆதிக்கம் சரிந்து இருந்தது. இப்படி இருக்கையில், கட்டணம் செலுத்தி பொதுப் பள்ளிகளுக்கு சென்றவர்கள் கிரிக்கெட்டை தடை இன்றி வின்செஸ்டர், புனித பால் போன்ற பள்ளிகளில் விளையாடினர். ஒலிவர் க்ரோம்வேல்லின் அரசாங்கம் கிரிக்கெட்டை தடை செய்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அரசாட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் அரசாட்சி புரிந்தவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஓய்வுநாளுக்கு இழுக்கு என்று கூறி தடை விதிக்கவில்லை.[1].

சூதாட்டமும் செய்தியாளர்களும் தொகு

1660 ஆம் ஆண்டு, ரெஸ்டோரேஷனுக்கு பிறகு(பழைய நிலைக்கு கொண்டுவந்த பிறகு) கிரிக்கெட் விளையாட்டு தன் பால் நிறைய சூதாடிகளின் கவனத்தை திருப்பியது. இவர்கள் பெரிய பந்தயங்களைக்கொண்டு ஆடத் துவங்கினர். 1664 ஆம் ஆண்டு "கவேலியே" நாடாளுமன்றம் கேமிங் ஆக்ட் 1664 நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்த சட்டம் பந்தய பணத்தின் அளவை £100 ஆக குறைத்தது. பெரும் புதையலாக அந்த காலத்தில் கருதப்பட்ட இந்த தொகை[1] தற்போது £NaN க்கு சமம் ஆகும்[7]. 17 ஆம் நூற்றாண்டின் முடிவுக்குள் கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டாக திகழத் துவங்கியது. 1967 ஆம் ஆண்டு சச்செக்சில் நடந்த ஒரு பெரிய போட்டியை பற்றி செய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை, பதினோரு பேர் கொண்டு ஆடப்பட்ட ஆட்டம் ஒரு பக்கத்திற்கு 50 கினியச்களை கொண்டு ஆடப்பட்டது என்று தெரிவிக்கிறது.[6].

1696 ஆம் ஆண்டு ஊடகச் சுதந்திரம் வழங்கிய பிறகு கிரிக்கெட் பற்றி முதல் முதலாக இப்படிப்பட்ட அறிக்கை செய்தித்தாள்களில் வெளிவந்தது. ஆனால் நெடுங்காலத்துக்கு பிறகுதான் கிரிக்கெட் பற்றி தெளிவான மற்றும் அடிக்கடி தெரிவிக்க கூடிய அறிக்கைகளை அச்சகங்களால் பெற முடிந்தது. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் செய்தி தாளில் வெளிவந்த செய்திகள் ஆட்டத்தை பற்றி குறிக்காமல் பேட்டிங்கை பற்றி மட்டும் குறிப்பிட்டு வெளிவந்தன.[1].

பதினெட்டாம் நூற்றாண்டின் கிரிக்கெட் தொகு

ஆதரவாளர்களும் விளையாட்டு வீரர்களும் தொகு

சூதாட்டம் தான் முதன் முதலில் ஆதரவாளர்களை இந்த விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தியது. சூதாடுபவர்கள் தங்கள் பந்தய பணம் பத்திரமாக இருப்பதற்காக தங்கள் சொந்த குழுவை ஏற்பாடு செய்து கொண்டனர். இந்த குழுக்கள் " கவுண்டி குழுக்கள்: என்று அழைக்கப்பட்டன. இவை 1660 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்டன. கவுண்டி பெயர்களை பயன்படுத்தி நடந்த முதல் விளையாட்டு 1709 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கு முன்னரே இப்படி பட்ட ஆட்டங்கள் நடந்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. 1697 ஆம் ஆண்டு நடந்த போட்டி சச்செக்சுக்கும் வேறொரு மாவட்டத்துக்கும் நடுவே நடந்திருக்கலாம்[1].

1725 ஆம் ஆண்டு முதல், இந்த ஆட்டத்திற்கு உயர்குடியினரும், வணிகர்களும் தான் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்தக் காரணத்தினால் கூட செய்திப்பிரிவினர் இந்த ஆட்டத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர் என்று கூட சொல்லலாம். சார்லஸ் லெனாக்ஸ், ரிச்மண்டின் இரண்டாம் கோமான், சார் வில்லியம் கேஜ், ஏழாவது பரோநெட், ஆலன் பரோட்ரிக், எட்வர்ட் ஸ்டேட் போன்ற பெரும் புள்ளிகள் இந்த ஆட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த காலகட்டத்தில் தான், தாமஸ் வேமார்க் போன்ற தனிப்பட்ட ஆட்டக்காரரை பற்றி செய்தி வெளியீடுகள் செய்திகளை பரப்பின.[5].

இங்கிலாந்துக்கு வெளியே பரவிய கிரிக்கெட் தொகு

வட அமெரிக்காவுக்கு, பதினேழாம் நூற்றாண்டில் கிரிக்கெட், ஆங்கிலேயர்கள் மூலம் பரவியது[4], இது வட இங்கிலாந்துக்கு பரவுவதற்கு முன்னரே பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் உலகின் மற்ற இடங்களுக்கு இது பரவியது. மேற்கிந்திய தீவுகளுக்கு குடியேற்ற நாட்டினராலும்[4], இந்தியாவுக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தாலும் நூற்றாண்டின் முதல் பகுதியில் இது கொண்டுவரப்பட்டது.[5]. 1788 ஆம் ஆண்டில் குடியேற்றங்கள் ஆரம்பித்த உடனேயே இது ஆஸ்திரேலியாவில் பரவ துவங்கிவிட்டது.[5] 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இந்த ஆட்டம் நியூசிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் பரவியது.[5]

புது சட்டங்கள் தொகு

மட்டை, பந்து, விக்கெட், ஆட்ட காலத்தின் அளவுகோல்கள், ஓவர்கள், எப்படி ஆட்டம் இழப்பது போன்ற அடிப்படை சட்டங்கள் காலம் காலமாக இருந்து வருகின்றன. 1728 ஆம் ஆண்டில், ரிச்மண்டின் கோமான் மற்றும் ஆலன் பரோட்ரிக் "ஆர்டிகல்ஸ் ஆப் அக்ரீமென்ட்" என்ற நடத்தை திட்டத்தை செயலாக்கப்படுத்தினர். இது பந்தயபணம் கொண்டு ஆடி ஹெயிப்பதற்கு பெரும் உதவியாக இருந்தது.[6].

முதன் முதலில் 1744 ஆம் ஆண்டில் கிரிக்கெட் சட்டங்கள் உருவாக்கப்பட்டு பின்னர்,1774 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டன. இந்த சமயத்தில் lbw, நடு ஸ்டம்ப், மட்டையின் அகலம் குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் கூடியிருக்கும் உயர் மனிதர்களுள் இருவரை நடுவர்களாக சீமான்கள் தேர்ந்தெடுத்த பின்னர், அந்த இரண்டு பேரும் எழகின்ற எல்லா தரப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும், என்று கூறின. . இந்த கோட்பாடுகள் "ஸ்டார் அண்ட் கார்டர் க்ளப்" குழுவின் உறுப்பினரால் உருவாக்கப்பட்டது. இவர்கள் தான் லார்ட்சில் MCC யையும் 1787 ஆம் ஆண்டு நிறுவினர். MCC உடனடியாக சட்டத்தின் பாதுகாவலனாக தந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு இன்று வரை காலத்துக்கு ஏற்றவாறு பரிசீலனை செய்து புது சட்டங்களை ஏற்றி வருகின்றது[8].

இங்கிலாந்தில் தொடர் வளர்ச்சி தொகு

இங்கிலாந்து முழுவதும் பரவிய கிரிக்கெட் முதன் முதலில் 1751 ஆம் ஆண்டு யோர்க்ஷயரில் விளையாடப்பட்டது.[9] 1760 ஆம் ஆண்டுக்கு பின்னர் தரையில் உருட்டி விட்ட பந்து வீச்சு முறை (பவுல்சில் உள்ளவாறு) பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. பந்து எறியும் முறை, லைனில் எப்படி வேறுபாடுகள் காட்ட முடியும், நீளம், வேகம் ஆகிய அனைத்திலும் மாற்றம் வந்தன.[1] 1772 ஆம் ஆண்டு முதல் மதிப்பெண் அட்டவணை வழக்கில் வந்தது. அது முதல் விளையாட்டு வளர்ச்சியைப்பற்றி நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.[10]

 
கிரிக்கெட் மட்டையை காண்பிக்கும் ஒரு ஓவியம் (படம் பெரிசாக தெரிய அதன் மீது கிளிக் செய்யவும்)

பதினெட்டாம் நூற்றாண்டின் மிக பிரபலமான சங்கங்கள் லண்டன் மற்றும் டார்ட்போர்டில்இருந்தன. இன்றும் நிலைத்து இருக்கின்ற ஆர்டிலேறி மைதானத்தில் நாட்டில்ன்டேல்ல் லண்டன் தனது ஆட்டங்களை ஆடியது. சச்செக்சில் இருந்த ச்ளிண்டன் ரிச்மண்டின் கோமானால் ஆதரிக்கப்பட்டிருந்த பொழுது அங்கு இருந்த நட்சத்திர வீரர் ரிச்சர்ட் நியூலாந்து ஆவார். மைடேன்ஹெட், ஹோர்ன்சர்ச், மெய்ட்ஸ்டோன், செவென்ஓக்ஸ் , ப்றோம்லே, ஆடிங்டன், ஹாட்லோ மற்றும் சேர்ட்செய் போன்ற பல புகழ் பெற்ற சங்கங்களும் இருந்தன.

ஆனால் ஹாம்ப்ஷயரில் இருந்த ஹாம்பெல்டன் சங்கம் தான் மிக பழமைவாய்ந்த சம்கமாக இருந்தது. இது 1756 ஆம் ஆண்டு மத குழுவினரால் துவங்கப்பட்டது. 1760 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சங்கம் தான் பெற்ற ஆதரவால் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு கிரிகெட் ஆட்டத்திற்கு நன்மை தந்ததுடன் MCC உருவாகவும் லோர்ட்ஸ் கிரிக்கெட் கிரௌண்ட் 1787 ஆம் ஆண்டில் திறக்கவும் காரணமாக இருந்தது. மாஸ்டர் பேட்ஸ்மேன் ஜான் ஸ்மால், வேக பந்து வீச்சாளர் தாமஸ் ப்றேட் போன்ற அற்புத ஆட்டக்காரர்களை ஹாம்பெல்டன் உருவாக்கியது. இவர்களின் கை தேர்ந்த போட்டியாளராக விளங்கியவர் சேர்ட்செய் மற்றும் சர்றேவின் பந்து வீச்சாளர், எட்வர்ட் "லம்பி" ச்டேவன்ஸ், இவரால் பரந்க்கும் பந்து வீச்சு முறை பிரபலம் அடைந்தது என்று கூறுகின்றனர்.

இந்த பந்து வீச்சை அதாவது பளைடெட், பிட்ச்ட், டெலிவெரி முறைகளை சமாளிக்க தான் நேர் மட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. "ஹாக்கி மட்டையை" போல் வளைந்து இருந்த மட்டை, பந்தை தரையில் உருட்டி விட்ட பொழுது தான் உதவியாக இருந்தது.

கிரிக்கெட் மற்றும் நெருக்கடி தொகு

பதினெட்டாம் நூற்றாண்டில், பெரிய அளவு போட்டிகள் ஏழு வருட போரின் காரணத்தால் நின்று போன போதுதான் கிரிக்கெட் முதன் முதலில் சர்ச்சையை சந்தித்தது. இது விளையாட்டு வீரர்கள் குறைந்ததாலும் முதலீட்டுதாரர்கள் குறைந்ததாலும் ஏற்பட்டது. ஆயினும் இந்த விளையாட்டு நிலைத்து இருந்தது. இடைப்பட்ட 1760 களில் "ஹாம்பெல்டன் காலம்" முறையே பிறந்தது.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரிக்கெட் மேலும் ஒரு சர்ச்சையை சந்திக்க நேரிட்டது. நேபோலியானிக் போர்களால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டன. இந்த முறையும் ஆட்டக்காரர்கள் குறைவாலும் போதிய முதலீடுகள் இல்லாததாலும் ஆட்டம் தடைப்பட்டது. 1760 களில் நடந்ததிப் போலவே இந்த ஆட்டம் நிலைத்திருந்தது. மேலும் படிப்படியாக தனது இடத்தை 1815 ஆம் ஆண்டு முதல் தக்கவைத்துக்கொள்ள துவங்கியது.

ரீஜென்சி காலத்தில் சர்ச்சையின் மூலமாக MCC திகழ்ந்தது. இது லோர்ட் பிரெடெரிக் போக்லேர்க் மற்றும் ஜார்ஜ் ஒச்பல்டேஸ்டன் இடையே இருந்த பகைமை காரணத்தால் மூண்டு இருந்தது. 1817 ஆம் ஆண்டில் இவர்களிடையே இருந்த கேள்விகளும் பொறாமைகளும் மேச் பிக்சிங் சர்ச்சையை உருவாக்கியது. இந்த சமையத்தில் மிக நல்ல ஆட்டக்காரரான வில்லியம் லாம்பர்ட் லோர்ட்ஸ் கிரிக்கெட் ஆடுகளத்தில் அவர் ஆயுள் முழுதும் போட்டியில் கலந்துகொள்ள தடை செய்யப்பட்டார். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே சூதாட்ட சர்ச்சைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

1820 களில் ரவுண்ட் ஆர்ம் பவுலிங்கை சேர்க்க கோரி கிரிக்கெட் ஆட்டம் தானே ஒரு சர்ச்சையை உண்டி பண்ணியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிரிக்கெட் தொகு

 
1820 கலீல் ஷெப்பீல்டில் உள்ள தருநாளில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கவுண்டி சங்கங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த ஆட்டம் பல அடிப்படை மாற்றங்களை சந்திக்க நேரிட்டது. நவீன மாவட்ட சங்கங்கள்,1839 ஆம் ஆண்டில் சச்செக்சில் ஆரம்பித்து பத்தொன்பதாம் நோற்றாண்டு முழுதும் நிறுவப்பெற்றன.

இந்த முதல் மாவட்ட சங்கம் ஆரம்பித்த உடனேயே வில்லியம் கிளார்க் ஆல் இங்கிலாந்து லெவனை 1846 ஆம் ஆண்டு நிறுவினார். இது ஒரு பணம் சம்பாதிக்கும் வழியாக இருந்தாலும், அதுவரை உயர் தர ஆட்டக்காரர்கள் சென்றிராத மாவட்டங்களிலும் கிரிக்கெட் ஆட்டத்தை பிரபலம் அடையச் செய்தது இந்த முயற்சி. இதே போன்று பல அணிகள் உருவாக்கப்பட்டன. இதே முறை முப்பது ஆண்டு காலத்திற்கு நீடித்து இருந்தது. ஆயினும் கவுண்டிகளும் MCC யும் நிலைத்தே இருந்தன.

ரயில் போக்குவரத்தின் வளர்ச்சியால் மத்திய மற்றும் இறுதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிரிக்கெட் வளர்ச்சிப்பெற்றது. இதனால், நெடுந்தொலைவில் இருந்து இரு அணிகள் வந்து அதிக பயண சோர்வில்லாமல் போட்டியிட முடிந்தது. பார்வையாளர்களும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து ஆட்டத்தை காண ஆரம்பித்தனர்.

1864 ஆம் ஆண்டு ஒரு புதிய பந்து வீச்சு புரட்சி ஏற்பட்டது. இதனால் ஓவர் ஆர்ம் பவுலிங் சட்டப்படுத்தப்பட்டது. இதே ஆண்டில் விஸ்டன் க்ரிக்கேடர்ஸ் அல்மனாக் முதன் முதலில் வெளிவந்தது.

"கிரேட் கிரிக்கெட்டர்" என்று அழைக்கப்பட்ட, W G கிரேஸ், முதல் ரக ஆட்ட அறிமுகத்தை 1865 ஆம் ஆண்டு பெற்றார். அவரது அபாரமான ஆட்டம் கிரிக்கெட்டை பெரிதும் வளர்ச்சி பெற செய்தது. அவர் பல நுண்ணியமான நுணுக்கங்களை ஆட்டத்துக்குள் புகுத்தினார். இது முக்கியாமாக பேட்டிங் நுட்பங்களில் புரட்சி ஏற்படுத்தியது.

சர்வதேச கிரிக்கெட் தொடங்குகிறது தொகு

 
நயாகரா நீர் வீழ்ச்சியில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல் ஆஸ்திரேலிய குழுவின் படம் (1878)

முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி, அமெரிக்கா மற்றும கனடாவுக்கும் இடையே 1844 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த போட்டி நியூயர்க்கில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஸ் கிரிக்கெட் க்ளப்பில் நடந்தது.[11]

1859 ஆம் ஆண்டில் ஆங்கிலேய முன்னணி வீரர்களைக்கொண்ட குழு ஒன்று முதன் முதலில் வட அமேரிக்காவுக்கு கடல் தாண்டி சுற்றுபயணம் சென்றது. 1862 ஆம் வருடம் முதல் ஆங்கில அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டது.

1868 ஆம் ஆண்டில் மே மாதத்தில் துவங்கி அக்டோபர் வரை ஆஸ்திரேலிய அபார்ஜின்அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டது. இதுவே கடல் கடந்து போட்டியில் கலந்து கொண்ட முதல் ஆஸ்திரலிய அணியாகும்.

1877 ஆம் ஆண்டு ஆஸ்திரலியா சென்ற இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளை முழு ஆஸ்திரேலியன் XI க்கு எதிராக விளையாடியதி. இதை டெஸ்ட் போட்டியின் ஜனனம் என்று கருதலாம். இதற்கு அடுத்த ஆண்டே இங்கிலாந்தில் முதன் முறை சுற்று பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெற்றி வாகை சூடி வீடு திரும்பினர். இந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படவில்லை என்றாலும், அதற்கு பின்னர் ஏராளமானவை விளையாடப்பட்டன. 1882 ஆம் ஆண்டில், தி ஓவலில், தி ஆஷேஸ் என்ற மிகப் பெரிய வரலாறு காணுகின்ற போட்டி உருவானது. உலகில் மூன்றாவது டெஸ்ட் விளையாடும் நாடாக தென்னாப்பிரிக்கா 1889 ஆம் ஆண்டில் உருவெடுத்தது.

தேசிய அளவு சாம்பியன்ஷிப்புகள் தொகு

1890 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வமான கவுண்டி சாம்பியன்ஷிப்இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை அடிப்படையாக கொண்டு மற்ற நாடுகள் தங்களை வழிமுறை படுத்திக்கொண்டன. 1892-93 இல் ஆஸ்திரேலியா ஷேப்பீல்த் கேடயத்தைநிறுவியது. தென்னாப்பிரிக்காவில் கூரி கோப்பை, நியூ சிலாந்தில் ப்ளங்கெட் கேடயம், இந்தியாவில் ரஞ்சி கோப்பையும் நிறுவப்பட்டன.

1890 ஆம் ஆண்டு முதல், முதல் உலகப்போர் வரை இருந்த காலம் நினைவில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் கிரிக்கெட்டை ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆடின. மேலும் இது அமைதிக் காலமாக இருந்ததால் இந்த ஆட்டத்தை மேலும் ரசிக்க முடிந்தது. இந்த நிலை முதல் உலகப்போரால் குலைந்தது. இந்த காலம் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. இந்த சமயத்தில் கிரேஸ், வில்ப்ரெட் ரோட்ஸ், C B ப்ரை, K S ரஞ்சித்சின்ஜி, விக்டர் ட்ரம்பர்போன்ற தலையாய வீரர்கள் விளையாடினர்.

ஒரு ஓவரில் இருக்கும் பந்துகள் தொகு

நான்கு பந்துகளை கொண்டிருந்த ஒரு ஓவர் 1889 ஆம் ஆண்டில் ஐந்து பந்தாக மாற்றப்பட்டது. இது ஆறு பந்துகளாக 1900 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகள் ஒரு ஓவருக்கு எட்டு பந்து என்று வைத்து சோதனை செய்து பார்த்தன. 1922 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓவர் ஒன்றுக்கு எட்டு பந்துகள் என்று மாற்றப்பட்டது. 1924 ஆமாண்டு நியூசிலாந்துக்கு பரவிய இந்த திட்டம் 1937 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கும் பரவியது. இங்கிலாந்தில் சோதனைக்காகவே இந்த முறை 1939 ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. இந்த சோதனை முறையை மீண்டும் 1940 ஆம் ஆண்டு நடத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கப்பட்டது. ஆனால் முதல் ரக கிரிக்கெட் இரண்டாம் உலகப்போரினால்நிறுத்திவைக்கப்பட்டது. அது திரும்பவும் ஆட துவங்கியபோது இங்கிலாந்து ஓவர் ஒன்றுக்கு ஆறு பந்து என்ற முறையையே கையாண்டது. 1947 கிரிக்கெட் சட்டங்கள் ஆட்டத்துக்கு ஏற்றவாறு ஒரு ஓவர் ஆறு அல்லது எட்டு பந்துகளை கொள்ளலாம் என்று விதித்தன. 1979/80 ஆஸ்திரேலியன் மற்றும் நியூசிலாந்து சீசன்கள் முடிவு பெற்றதும், ஆறு பந்து கொண்ட ஓவர் முறையே உலகெங்கும் பயன் படுத்த துவங்கினர். தற்போது, அதாவது 2000 ஆமாண்டு வெளிவந்த சட்டம் ஓவர் ஒன்றுக்கு ஆறு பந்து மட்டுமே என்று குறிப்பிடுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் கிரிக்கெட் தொகு

டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சி தொகு

1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இம்பீரியல் கிரிக்கெட் மாநாட்டில் (இவ்வாறு தான் முதலில் அழைக்கப்பட்டது ) முதலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டும் தான் உறுப்பினர்களாக இருந்தன. இரண்டாம் உலக போருக்கு முன்னர் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து டெஸ்ட் போட்டி நாடுகளாக இருந்தன. போருக்கு பின்னர் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டி நாடாக மாறியது. சர்வதேச ஆட்டம் இருபதாம் நூற்றாண்டில் முடிவில் மேலும்பல நாடுகள் சேர்ந்ததன் மூலம் சுவாரஸ்யம் ஆனது. அவற்றுள் முக்கிய மூன்று நாடுகள் இலங்கை, சிம்பாப்வே, மற்றும் வங்காள தேசம் ஆகும்.

இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டி முதல் ரக ஆட்டமாக திகழ்ந்தது. அனால் இதுவும் பல பிரச்சனைகளை சந்தித்தது. இங்கிலாந்தின்டவுக்லஸ் ஜார்டின் கால் கோட்பாட்டை வைத்து ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் ஆட்டத்தை "பாடிலைன்சீரிஸில்" (1932-33) சரிகாட நினைத்தார்.

தென்னாப்பிரிக்கா நீக்கப்பட்டது (1970-1991) தொகு

சர்வதேச கிரிக்கெட், தென்னாப்பிரிக்க இனவொதுக்கலால் பெரும் சரிவை கண்டது. 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பிரச்சனையால் தென்னாப்பிரிக்கா பொதுநல நாடுகள் சங்கத்திலிருந்து வெளி வந்தவுடன், அது அந்த கால விதிமுறைப்படி சர்வதேச கிரிக்கெட் மாநாட்டை (ICC)விட்டும் வெளியேற நேர்ந்தது. 1968 ஆம் ஆண்டு கிரிக்கெட் இனவொதுக்கலை மேலும் தீவிரமாக எதிர்க்க துவங்கியது. இங்கிலாந்து அணியில், பேசில் ட'ஒலிவேரா என்ற ஒரு கருப்பு வீரர் இடம் பெற்றதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 1970 ஆம் ஆண்டு ICC உறுப்பினர் தென்னாப்பிரிக்காவை கால வரைமுறை இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆனால், அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிக பலமான அணியாக தென்னாப்பிரிக்க அணிதான் இருந்தது.

உயர் தர போட்டியில் இருந்து விலக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் அணிகளாக திரண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிக அளவு பணத்தை வாரி இறைத்தது. இந்த சுற்றுப்பயணத்தை "கலக காரர்களை சுடுப்பயணம்" என்று அழைத்தனர். இதற்கு ICC , தென்னாப்பிரிக்கா செல்கின்ற எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் அவரை அட்டவணையில் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக்குவது என்ற முடிவை தெரிவித்தது. விளையாட்டு வீரர்கள் 1970 களில் மிக குறைவான சம்பளத்தைப் பெற்றதால் அவர்களில் பெரும்பாலோர் இந்த தென்னாப்பிரிக்க சுற்று பயணத்துக்கு ஒற்றுக்கொண்டனர். இவற்றில் ஆட்டத்திலிருந்து கூடிய விரைவில் ஒய்வு பெற இருந்த நிறைய வீரர்கள் கலந்து கொண்டனர். ஆதலால் அவர்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இந்த கலகக்காரர்களின் சுற்றுபயணம் 1980 களிலும் நடைபெற்றது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசியல் முன்னேறத் துவங்கியது. கூடவே இனவொதுக்கீடுகளும் முடிவுக்கு வர ஆரம்பித்தது. நெல்சன் மண்டேலாவின் தலைமைக்கு கீழ் "வானவில் நாடாக" திகழும் தென்னாப்பிரிக்கா சர்வதேச விளையாட்டுக்குள் மீண்டும் 1991 ஆம் ஆண்டு நுழைந்தது.

உலக தொடர் கிரிக்கெட் தொகு

உயர் தர வீரர்கள் சந்தித்த பண பிரச்சனையால் 1977 ஆமாண்டு மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த சமயத்தில் ஆஸ்திரேலிய செய்தி வட்டாரத்தின் அதிபதியாக விளங்கிய கெர்ரி பாக்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திலிருந்து தனக்கு தேவையான தொலைகாட்ட்சி உரிமத்தை பெறமுடியாமல் தவித்தார். குறைவான சம்பளம் வாங்கும் வீரர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த பாக்கர் உலகின் உயர் தர வீரர்கள் பலருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதில் சர்வதேச கிரிக்கெட்டின் வழிமுறைக்கு வெளியே தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் ஆட இந்த வீரர்கள் ஒத்துக்கொண்டு இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த சிறந்த தென்னாப்பிரிக்க வீரர்களுள் சிலரை உலக தொடர் கிரிக்கெட் தேர்வு செய்து மற்ற உயர் தார் ஆட்ட வீரர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் ஆட வைத்தது. இது 1979 ஆம் ஆண்டு வரைதான் நீடித்து இருந்தது. கலகார ஆட்டக்காரர்கள் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பெற்றனர். பலரும் அவர்களின் டேஹ்சிய அணி அவர்களை விட்டு விட்டு முன்னேறி இருப்பதையும் கண்டனர். இந்த உலக தொடர் கிரிக்கெட்டின் விளைவால் விளையாட்டு வீரர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது, வண்ணமயமான கருவித்தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. போட்டிகள் இரவு நேரங்களிலும் ஆடப்பட துவங்கின.

குறைந்த ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொகு

1960 களில் ஆங்கிலேய மாவட்ட அணிகள் ஒரே ஒரு இன்னிங்க்ஸ் கொண்டு விளையாட துவங்கின. இதில் ஒரு இன்னிங்க்ஸிலே அதிக அளவு ஓவர்களை கொண்டு விளையாடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 1963 ஆரம்பிக்கப்பட்ட இந்த வகை போட்டிகள் குறைந்த ஓவர்களை கொண்டு இருந்தாலும் 1969 ஆமாண்டு முதல் பிரபலம் அடைய துவங்கியது. தேசிய அளவில் உருவாக்கப்பட்ட லீக் மாவட்ட சாம்பியன்ஷிப்களில் நடந்த போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தது.

இந்த முறையான ஆட்டத்துக்கு நிறைய விசிறிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள் நிறைய நன்மைகளை கொண்டிருந்தன. இதனால் ஒரே நாளில் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக தரமுடிகிறது. இது இளைஞர்கள் மத்தியிலும் நேரம் அதிகம் இல்லாதவர்கள் இடையிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கிரிக்கெட் விளையாட்டில் பணமும் குவிய துவங்கியது.

முதல் குறைந்த ஓவர் கொண்ட சர்வதேச போட்டி 1971 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் களத்தில் நடைபெற்றது. இது மழை காரணத்தால் தவற விடப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு பதிலாக ஆரம்ப நாட்களில் விளையாடப்பட்டது. இது ஒரு சோதனையாக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் முறையாக நடத்தப்பட்டது. ஆனால் இதுவே மிக பிரபலம் ஆனது. லிமிடட் ஓவர்ஸ் இன்டர்நேஷனல்ஸ் (LOI அல்லது ODI (ஒரு நாள் சர்வதேச போட்டிகள்)) அன்று முதல் இன்று வரை பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு ஆதரவாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் உலக கோப்பையை 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கேற்றது கொண்டன.

தொழில் நுட்பத்தின் அதிகரிப்பு தொகு

கிரிக்கெட் பற்றிய செய்திகளை நிறைய வெளியிட ஆர்வத்தை தொலைக்காட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியது இந்த குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள். புது வகையான தொழில் முறைகளை கொண்டு வெளியிடப்பட்ட LOI போட்டிகளின் வெற்றியைக்கண்டு அதே போல் டெஸ்ட் போட்டிகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தனர். ஆழ்ந்த புள்ளி விவரவியல் தருதல், படம் மூலம் ஆராய்ந்து கூறுதல், ஸ்டம்ப்களில் சிறு கேமராக்கள் புகுத்துதல், ஆடு களத்தின் பல இடங்களில் புகைப்பட சாதனங்களைப் பொருத்துதல், விரைந்து பார்க்கக்கூடிய அளவிலான ஒளிப்பதிவு மற்றும் கணினியை கொண்டு ஒரு பந்தில் டெலிவரியை இன்னும் நுட்பமாக கவனிக்க உதவும் மற்றும் போட்டி நடுவரின் தீர்ப்புகளை புரிந்து கொள்ள உதவும் கிராபிக்ஸ் ஆகியவை தற்கால தொழில் நுட்பங்கள் ஆகும்.

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில், 1992 ஆம் ஆண்டில் முதன் முதலில் ரன் அவுட்களை தொலைக்காட்சி சாதனம் மூலம் சரி பார்க்க மூன்றாவது நடுவர்நியமிக்கப்பட்டார். இப்போது இந்த மூன்றாவது நடுவரின் திறன் ஸ்டம்ப்பிங், பந்தை பிடித்தல், எல்லையைத் தாண்டும் பந்தை கவனித்தல் ஆகிய இடங்களிலும் உதவியாக இருக்கிறது. இதுவரை மூன்றாம் நடுவர் lbw முறை ஆட்டம் இழப்பதை நிர்ணயம் செய்ய கூப்பிட படுவதில்லை. இப்பொழுது நேரடி அலைவரிசை மூலம் இதனை கண்காணிக்கும் வசதிகளும் வந்து விட்டன.(அதாவது, ஹாக்-ஐ) ஒரு பந்து போகும் திசையை துல்லியமாக கணிக்க இது பெரிதும் உதவுகிறது.

21 ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட் தொகு

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஆகட்டும், அல்லது அதனை பார்வையிடுபவர்கள் ஆகட்டும் அல்லது அதனை படம் பிடித்து உலகிற்கு காட்டும் செய்தியாளர்கள் ஆகட்டும் கிரிக்கெட் என்றுமே இதனை அதிக அளவில் தான் பார்த்து வருகிறது.

ICC கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக முழு மூச்சாக இறங்கி உலகமெங்கும் மேலும் பல டெஸ்ட் போட்டி நாடுகள் உருவாக பல முயற்சிகள் எடுத்து வருகின்றது. இந்த வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது ICC. 2004 ஆம் ஆண்டில் ICC சர்வதேச கோப்பை முதல் ரக கிரிக்கெட்டை முதன் முதலில் 12 நாடுகளுக்கு கொண்டுவந்தது.

ஜூன் 2001 இல் ICC "டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையை" அறிமுகப்படுத்தியது. மேலும் அக்டோபர் 2002 இல் இது "ஒரு நாள் சர்வதேச சாம்பியன்ஷிப் அட்டவணையையும் " அறிமுகப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த இரு அட்டவணைகளில் முதல் இடத்தை வகித்து வருவது ஆஸ்திரேலியாதான்.

கிரிக்கெட் தற்போது கண்டிருக்கும் புதுமை Twenty20(ட்வென்டி ட்வென்டி)ஆகும், இது பெரும்பாலும் மாலைநேர பொழுதுபோக்காக ஆடப்படுகிறது. இந்த ஆட்ட முறை பெரும் அளவில் பார்வையாளர்களை ஆட்டகளத்திற்கும் தொலைக் காட்சியின் பக்கத்தில் இழுத்து வந்திருக்கிறது. ஆரம்ப ICC ட்வென்டி 20 உலக கோப்பைபோட்டி, 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதனை பின் தொடர்ந்து மற்றொரு போட்டி 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் ட்வென்டி20 லீக்கள் - அதிகாரபூர்வம் இல்லாத இந்தியன் கிரிக்கெட் லீக், 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, அதிகாரபூர்வமான இந்தியன் பிரீமியர் லீக், 2008 இல் துவங்கப்பட்டது. இவற்றின் வருகை கிரிக்கெட்டின் வருங்காலத்தை பற்றி அலச பெரிதும் வழிவகுத்தன.[12][13][14][15]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "பிரோம் லைட்ஸ் டு லோர்ட்'ஸ்; தி ஹிஸ்டரி ஆப் கிரிக்கெட்: 1300–1787". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2009-12-17.
  2. 2.0 2.1 டெரெக் பர்லே, அ சோஷியல் ஹிஸ்டரி ஆப் இங்கிலீஷ் கிரிக்கெட் , ஆரம், 1999
  3. ப்லாண்டர்சில் அப்பொழுது பயன்படுத்தப்பட்ட மொழி இடைகால டச்ஆகும்.
  4. 4.0 4.1 4.2 ரோவ்லாந்து போவேன், கிரிக்கெட்: அ ஹிஸ்டரி ஆப் இட்ஸ் க்ரோத் அண்ட் டெவெலப்மென்ட் , அயர் & ச்போட்டிஸ்வூட் , 1970
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 H S ஆல்தம், அ ஹிஸ்டரி ஆப் கிரிக்கெட் , வால்யூம் 1 (to 1914), ஜார்ஜ் ஆலேன் & அன்வின், 1962
  6. 6.0 6.1 6.2 திமோதி J மெக்கேன், சசெக்ஸ் கிரிக்கெட் இன் தி எயடீந்த் செஞ்சுவரி , சசெக்ஸ் ரேகொர்ட் சொசைடி, 2004
  7. UK CPI inflation numbers based on data available from Measuring Worth: UK CPI.
  8. கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வமான சட்டங்கள்
  9. F S ஆஷ்லி கூபர், அட் தி சைன் ஆப் தெஹ் விக்கெட்: கிரிக்கெட் 1742-1751 , கிரிக்கெட் கால வெளியீடு, 1900
  10. ஆர்தர் ஹேகார்த், ச்கொர்ஸ் & பயோகிராபீஸ் , வால்யூம் 1 (1744-1826), லில்லிவைட், 1862
  11. "United States of America v Canada". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.
  12. IPL கிரிக்கெட்டை எவ்வாறு மாற்றும்? BBC நியூஸ் 17th ஏப்ரல் 2008
  13. கிரிக்கெட்'ஸ் நியூ ஆர்டர் BBC நியூஸ் 29 பிப்ரவரி 2008
  14. கிர்க்கேட்டின் கண்களாக வெளிவருகின்ற நட்சத்திரங்கள் பெங்களூருக்கு மாறுகின்றனர். தி கார்டியன் ஏப்ரல் 18, 2008
  15. டெஸ்ட் விளையாடும் நாடுகள் உடனடியாக செயல் படவேண்டும் அல்லது ஆட்டக்காரர்களை இழக்க வேண்டும் பரணிடப்பட்டது 2012-12-08 at Archive.today தி ஆஸ்திரேலியன் ஏப்ரல் 18, 2008

வெளி இணைப்புகள் தொகு