துர்க்கா கணபதி

துர்க்கா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 31வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் துர்க்கா கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக் கை, பெரியமேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி, நாவற்பழம் இவற்றை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையுடன் விளங்குபவர்.

கோவை மாவட்டம், பிளிச்சி ஊராட்சி, சாந்திமேடு ஸ்ரீ அங்காளம்மன்புரத்தில் அருள்மிகு ஸ்ரீ துர்கா கணபதி கோவிலில் எட்டு கரங்களுடன் பெரிய தொந்தியுடன் பிரம்மாண்டமாக துர்கா கணபதி காட்சி தந்து அருள்பாளிக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்கா_கணபதி&oldid=3713019" இலிருந்து மீள்விக்கப்பட்டது