தெற்குப்பொய்கைநல்லூர் சுவர்ணபுரீசுவரர் கோயில்

தெற்குப்பொய்கைநல்லூர் சுவர்ணபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் வேளாங்கண்ணிக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

இங்குள்ள மூலவர் சுவர்ணபுரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி. சோழ நாட்டில் பல கோயில்களில் விமானங்கள் பொன்வேய்ந்தநிலையில் காணப்பட்டதால் அவ்வ்று இருந்த விமானங்களை பொன்பரப்பி என்றழைப்பர். அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை சுவர்ணபுரீசுவரர் என்றே அழைப்பர். இவ்வூரிலும் அவ்வாறான இறைவன் இருப்பது சிறப்பாகும்.[1]

சிறப்பு தொகு

வேறு எந்த சிவன் கோயிலிலும் காணமுடியாத தீமிதித் திருவிழா இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலின் வடக்கே பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தரின் ஜீவ சமாதி வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014