தெ. வ. இராசரத்தினம்

நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம் (Tellipalai Wanarajah Rajaratnam, 21 டிசம்பர் 1920 - 15 சனவரி 1994) இலங்கையின் ஒரு முன்னணித் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பருவ நீதிமன்ற ஆணையராகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

நீதிபதி
ரி. டபிள்யூ. இராசரத்தினம்
T. W. Rajaratnam
இலங்கை மீயுயர் நீதிமன்ற இளநிலை நீதிபதி
பதவியில்
1972–1978
இலங்கை நாடாளுமன்றம்
for தேசியப் பட்டியல்
பதவியில்
1989–1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-12-21)21 திசம்பர் 1920
இறப்பு15 சனவரி 1994(1994-01-15) (அகவை 73)
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
முன்னாள் கல்லூரிகண்டி திரித்துவக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்வு தொகு

இராசரத்தினம் யாழ்ப்பாண வழக்கறிஞர் டி. சி. இராசரத்தினம் என்பவருக்கு இரண்டாவது மகனாக[1] 1920 டிசம்பர் 21 இல் பிறந்தார். தந்தை இலங்கை அமெரிக்க மிசனின் தலைவராகவும், மலாயன் இலங்கை புகையிலைக் கம்பனியின் தலைவராகவும் இருந்தவர்.[1] இராசரத்தினம் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தின் சிறப்புப் பட்டம் பெற்றார்.[2]

பணி தொகு

இராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார்.[2] 1951 இல் இலண்டன் லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பி அங்கு பணியாற்றினார். மகாதேவன் சதாசிவம் வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார்.[3] இதன் பின்னர் நீதித் துறை சேவையில் இணைந்து, 1970 இல் பருவ நீதிமன்ற ஆணையராக நியமனம் பெற்றார்.[2] 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியில் இருந்தார்.[2]

அரசியலில் தொகு

1989 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார்.[2]

எழுதிய நூல்கள் தொகு

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராசரத்தினம் A Manual of Industrial Law, Plantation Workers' Manual ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.[2] அத்துடன் இவர் எழுதிய A Judiciary in Crisis?: The Trial of Zulfikar Ali Bhutto என்ற நூலுக்கு[4] பாக்கித்தானின் இலால்-இ-கைத்-இ-அசாம் விருது வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "20th Death Anniversary Of Justice T.W.Rajaratnam". Sri Lanka Guardian. 15 சனவரி 2014. http://www.srilankaguardian.org/2014/01/20th-death-anniversary-of-justice.html. பார்த்த நாள்: 6 ஏப்ரல் 2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 152.
  3. "A murder retold". சண்டே டைம்சு. 13 ஆகத்து 2006. http://sundaytimes.lk/060813/plus/books.html. 
  4. Rajaratnam, T. W. (செப்டெம்பர் 1988). A Judiciary in Crisis, Trial of Zulfikar Ali Bhutto. சென்னை: State Mutual Book & Periodical Service, Limited. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780785547778.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ._வ._இராசரத்தினம்&oldid=3083136" இலிருந்து மீள்விக்கப்பட்டது