தேனி (திருக்குர்ஆன்)
சூரா தேனீக்கள் (Bees அல்லது Sūrat an-Naḥl, அரபு மொழி: سورة النحل) என்பது திருக்குர்ஆன் உடைய 16ஆவது சூரா (அத்தியாயம்) ஆகும். இது தேனீக்கள் என்னும் 128 வசனங்களைப் பெற்றுள்ளது.
தொகுப்பு தொகு
இந்த சூராவானது பல கடவுட் கொள்கைக்கு எதிராக எச்சரிக்கை அளிப்பதாக உள்ளது. பொய்க்கடவுளர்கள் அல்லது அவற்றை வழிபடுவோர் எதையும் புதியதாக படைக்க முடியாது. ([திருக்குர்ஆன் 16:20]), மேலும் அல்லாவுக்கு எதிராக மனிதனால் படைக்கப்பட்ட எதையும் அல்லாவுடன் ஒப்பிடவும் கூடாது ([திருக்குர்ஆன் 16:74]). இது அல்லாஹ்வால் மனிதனுக்கு வழங்கப்பட்ட மற்றும் அதன் வளங்கள் ஆகியவற்றின் பொருட்டு அல்லாஹ்வைப் போற்றிப் பாடும் புகழ்மாலையாக அமைந்துள்ளது. இந்த சூராவின்படி கடல்கள், விண்மீன்கள், மலைகள் போன்ற, உலகில் உள்ள இயற்கையின் அதிசயங்கள் இறைவனின் முடிவிலா சக்திக்கு சாட்சிகளாக உள்ளன ([திருக்குர்ஆன் 16:14]).
திருக்குரான் உடைய 66வது வசனமானது கால்நடைகளில் பால் உற்பத்தியாகும் அற்புதம் பற்றி விளக்குகிறது: "இறைவனால் கால்நடைகளின் உடலில் கழிவுப்பொருட்கள் மற்றும் இரத்தம் இவற்றுக்கிடையிலிருந்து குடிப்பதற்கு ஏற்ற, தூய்மையான, அதனை அருந்துபவர்களுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய, பால் உற்பத்தி செய்யப்படுகிறது".
திருக்குரான் உடைய 67வது வசனமானது கொடிகளின் அற்புதம் பற்றி விளக்குகிறது:
'பேரீச்சை மரங்களிலிருந்தும், கொடிகளிலிருந்தும் உங்களுக்கு செறிவூட்டப்பட்ட பானங்களும், முழுமையாக்கப்பட்ட உணவும் கிடைக்கச் செய்துள்ளோம். இதுவும் அறிவுக்கூர்மை உள்ளவர்களுக்கு நாம் வழங்கும் அறிகுறியாகும்'
வசனம்[திருக்குர்ஆன் 16:103] திருக்குர்ஆன் என்பது முகமது என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு சாட்டியுரைத்தலுக்கு விளக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது
வெளி இணைப்புகள் தொகு
- தேனி (திருக்குர்ஆன்) Mp3 பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம்