தேவானந்த பரலி

அசாமைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர்

தேவானந்த பரலி (அசாமிய மொழி: দেৱানন্দ ভৰালি ,1883-1972) என்பவர் அசாமைச் சேர்ந்த ஒரு முன்னோடி மொழியியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர் ஆவார். [1] இவர் மிரி என்ற புனைபெயரைப் பயன்படுத்தி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் 1883 சூனில் அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் இஷானந்த பரலிக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை தொகு

பரலியின் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் அசாமி ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளன. அவரது முக்கிய படைப்புகளில் சில:

  • ஆசாமிய பாஷர் மௌலிக் பிகார் அரு சாஹித்யோர் சினகி (অসমীয়া ভাষাৰ মৌলিক বিচাৰ আৰু সাহিত্যৰ চিনাকি), 1912 ல் வெளியிடப்பட்டது, [2]
  • Assamese Grammar in English (1902),
  • A Study of the Phonology and Vocabulary of Assamese Language (1960). [3]
  • சினா லூயிடேயா பாரே, பாரே (1972) [4]

இவர் "உஷா", "பன்ஹி" போன்ற அசாமிய இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர். சேக்ஸ்பியரின் "மக்பத்" நூலை முதன்முதலாக அசாமிய மொழியில் மொழிபெயர்த்தார்.

பரலியின் நாடகப் படைப்புகள் பின்வருமாறு:

  • பீமதர்பா (ভীমদৰ্প), மக்பத்தின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 1910 இல் வெளியிடப்பட்டது. [5]
  • ஸ்ரீமான்டோ சங்கர் (শ্্ীমন্তশর) (1944)
  • பிஹு (বিহু)

குறிப்புகள் தொகு

  1. Kaliram Medhi (1978). Studies in the Vaiṣṇava Literature & Culture of Assam. Assam Sahitya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
  2. "Asamiya Bhashara Maulika Bicara aru Sahityara Cinaki (8173310270) by Debananda Bharali @". Bookfinder.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Current Trends in Linguistics: V. 9: Linguistics in Western Europe Pts. 1 & 2, and Index to Names. Walter de Gruyter. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
  4. Cīnā Luitaea pāre, pāre. Dattabaruwā. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
  5. "Indian ReviewAssamese LiteratureShakespeare in Assamese : Navakanta Barua". Indianreview.in. Archived from the original on 2012-08-29. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவானந்த_பரலி&oldid=3667171" இலிருந்து மீள்விக்கப்பட்டது