தேவ காந்த பருவா

இந்திய அரசியல்வாதி

தேவ காந்த பருவா (Dev Kant Barooah - D K Barooah) (22 பிப்ரவரி 1914 – 28 சனவரி 1996), இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நெருக்கடி நிலையின் போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக (1975–77) இருந்தவர். 1974-ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியைப் புகழ்பாடும் விதமாக, இந்தியாவே இந்திரா. இந்திராவே இந்தியா (India is Indira. Indira is India.) என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர்.[1] 1977-இல் 6வது மக்களவைக்கு நௌகாங் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]

தேவ காந்த பருவா
தேவ காந்த பருவா (1976)
பிறப்பு22 பெப்பிரவரி 1914
திப்ருகார்
இறப்பு28 சனவரி 1996 (அகவை 81)
தில்லி
ரோமானிய நாட்டு அதிபருடன், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவர் தேவகாந்த பரூவா (இடது), ஆண்டு 1976

1 பிப்ரவரி 1971 முதல் 4 பிப்ரவரி 1973 முடிய பிகார் மாநிலத்தின் ஆளுநராகச் செயல்பட்டவர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ_காந்த_பருவா&oldid=3217424" இலிருந்து மீள்விக்கப்பட்டது