பண்டைய உரையாசிரியர்களில் உச்சிமேல் கொள்ளும் புலவராகப் போற்றப்பட்டவர் நச்சினார்க்கினியர் . இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டு. இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று தொல்காப்பிய உரை. இவரது உரையில் பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்று இவர் தமது உரைநூல்களில் 83 நூல்களை மேற்கோள் காட்டி எடுத்தாண்டுள்ளதாகும். அந்த நூல்கள்:
நூலின் முதல் பக்கம்
வசைக்கூத்து
வளையாபதி
விளக்கத்தார் கூத்து
உரை நலம்
தொகு
இவரது உரையில் காணப்படும் நயப்பாடுகளில் சில:
படிமை - தவ்வேடம் [1]
ஒடு - ஓடு, ஆல் - ஆன், மூன்றாம் வேற்றுமை உருபுகளை உயிர் வரும்போது ஓடு, ஆன் என எழுதுவது.
தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வேறு பாடம் கொள்ளுதல். [2]
பல ஈறுகளால் முடிவனவற்றைத் தொகுத்து முடித்தலின் தொகைமரபு எனப்பட்டது.
கருவிநூல்
தொகு
மு. அருணாசலம் , தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் மதுரைப் பரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், புன்னாலைக் கட்டுவன் பிரயஸ்ரீ சி. கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் ஈழகேசரி அதிபதி நா. பொன்னையா அவர்களால் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டவை. 1937
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு, 1962
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு, 1965
அடிக்குறிப்பு
தொகு
↑ சிறப்புப் பாயிர உரை
↑ இவரது செய்யுளியல் உரை பதிப்பில் கு. சுந்தரமூர்த்தி 30 தொல்காப்பிய நூற்பாப் பாடவேறுபாடுகளைக் காட்டியுள்ளார்.