நதீம் கான் (Nadeem Khan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை ஆர்வலர். சமூக உரிமைகள் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார். இந்துத்துவா அரசியல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசின் அட்டூழியங்களை விமர்சிப்பவராகவும் செயல்படுகிறார். சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கத்தின் தேசிய அழைப்பாளராக முக்கியத்துவம் பெறுகிறார். [1] ஐக்கிய வெறுப்புக்கு எதிரான அமைப்பின் இணை நிறுவனர் ஆவார், இவ்வமைப்பு இந்தியாவில் நடக்கும் கொலைகள் மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. நதீம் கான் சமாத்-இ-இசுலாமி இந்து அமைப்புடனும் தொடர்புடையவராக அதன் உதவி மக்கள் தொடர்பு செயலாளராகவும் இயங்கினார்.

நதீம்கான்
Nadeem Khan (Social Activist)
பிறப்புபதேபூர், உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்முகமது வாசிக் நதீம் கான்
குடியுரிமைஇந்தியன்
கல்விமுதுநிலை வணிக நிர்வாகம்
பணிசெயற்பாட்டாளர்
அமைப்பு(கள்)சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கம்.
அரசியல் இயக்கம்நசீப் இயக்கத்திற்கு நீதி

செயற்பாடு தொகு

நதீம் கான் ஒரு முதுநிலை வணிக நிர்வாகியாவார். விற்பனை நிபுணரான இவர் ஏர்டெல், வோடபோன், நோக்கியா, யூனிகார்ன், போன்ற நிறுவனங்களில் பல ஆண்டுகளாக சீனாவில் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சிறுபான்மை உரிமை ஆர்வலராக தனது வேலையை விட்டுவிட்டார்.

ஐக்கிய வெறுப்புக்கு எதிரான அமைப்பு தொகு

நதீம் கான் மற்ற ஆர்வலர்களுடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு வெறுப்புக்கு எதிரான குற்றப் பிரச்சார முயற்சியான ஐக்கிய வெறுப்புக்கு எதிரான அமைப்பு ஒன்றை தொடங்கினார். இவ்வமைப்பு தொழில் வல்லுநர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அதிகாரத்துவவாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவாகும், இவர்கள் நாடு முழுவதும் மாநாடுகள், போராட்டங்கள், பட்டறைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் வெறுப்புக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காரணத்தை முக்கிய விவாதங்களுக்குக் கொண்டு வர உதவவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்கிறார்கள்.

நசீப் இயக்கத்திற்கு நீதி தொகு

சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இசுலாமிய மாணவர் நசீப் அகமது காணாமல் போன பிறகு, இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள நசீப்பின் தாயார் பாத்திமா நபீசு தலைமையில் பொதுவுடமைக் கட்சி தலைமையகம் மற்றும் ஜந்தர் மந்தரில் நதீம் கான் மற்ற ஆர்வலர்களுடன் பலமுறை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தவிர நதீம் கான் நசீப் வழக்கில் கையெழுத்து இயக்கத்தையும் முன்னெடுத்திருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. " வெறுப்புக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் யார், ஏன் அமித் ஷா அவர்களை குறிவைக்கிறார்" TheQuint.( 2020-03-12) மீட்டெடுக்கப்பட்டது. 06 ஜனவரி 2023.
  2. " தர்ராங் காயமடைந்து, முறையான சிகிச்சையின்றி, மொய்னுல் ஹக்கின் மகன் போலீசில் புகார் அளித்தார் " தி வயர்.( 04 அக்டோபர் 2021) ஜனவரி 06, 2023 இல் பெறப்பட்டது.
  3. " டெல்லி கலவரங்கள்: ஜாமியாவின் ஆராய்ச்சி அறிஞர் கைது செய்யப்பட்டார், நிரபராதிக்கு எதிராக செயல்பட்டதாக காவல்துறை குற்றம் சாட்டப்பட்டது " TheLogical Indian. ஜனவரி 06, 2023 இல் பெறப்பட்டது.
  4. " சிவில் ஒத்துழையாமை NRC, NPR மற்றும் CAB ஆகியவற்றைச் சமாளிப்பதற்கும், குடிமக்களை அறிவிப்பதற்கும் ஒரு வழியாகும்" enewsrooom.in 06 ஜனவரி 2023 அன்று பெறப்பட்டது.
  5. " உங்களுடையது போலவே இந்தியாவும் என்னுடையது என்று நான் சொல்வது என் தவறா? - உமர் காலித் " காவல்துறை திட்டத்தின் ஒரு சுயவிவரம். ஜனவரி 06, 2023 இல் பெறப்பட்டது
    1. ['Darrang Injured Left Without Proper Treatment, Moinul Haque's Son Made to Report to Police' "https://m.thewire.in/article/communalism/darrang-injured-left-without-proper-treatment-moinul-haques-son-made-to-report-to-police"]. The Wire. 04 October 2019. 'Darrang Injured Left Without Proper Treatment, Moinul Haque's Son Made to Report to Police'. 
    "https://ta.wikipedia.org/w/index.php?title=நதீம்_கான்&oldid=3633219" இலிருந்து மீள்விக்கப்பட்டது