நன்றி (திரைப்படம்)

நன்றி (Nandri) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதையை அபையா நாயுடு எழுதினார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார். இதில் கார்த்திக், அர்ஜுன் சர்ஜா , நளினி , மஹாலட்சுமி மற்றும் சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவுனி (நாய்) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது. அர்ஜுன் சர்ஜா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் கன்னட திரைப்படமான தாலியா பாக்யாவின் மறுஆக்கமாகும்.[1]

நன்றி
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஏ. வி. எம். ராஜன்
ராஜ் மகால் இண்டெர்நேஷனல்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகார்த்திக்
நளினி
வெளியீடுஆகத்து 17, 1984
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இசை சங்கர் கணேஷ் மற்றும் பாடல் வரிகள் வாலி எழுதியது .

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 "நான் தான் ருக்குமணி" எஸ். பி. சைலஜா வாலி 04:05
2 "வா வா என் தலைவன்" பி. ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் 04:21
3 "தாய் செய்த பாவம்" பி. சுசீலா 04:41
4 "மதுரை நகரினிலே" ராஜூ ஜெயராம், வாணி ஜெயராம் 04:54

மேற்கோள்கள் தொகு

  1. "Nandri". spicyonion. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்றி_(திரைப்படம்)&oldid=3913197" இலிருந்து மீள்விக்கப்பட்டது