நாகம்பாடி நாகநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நாகம்பாடி நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், நாகம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு நாகநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:சிவன் கோவில் தெரு, நாகம்பாடி, குத்தாலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:நாகநாதர்
தாயார்:நாகவள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நாகநாதர், நாகவள்ளி சன்னதிகளும், விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன், நாகவள்ளி, அப்பர், சுந்தரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், நவகிரகம், துர்கா, சண்டிகேஸ்வரர், மகாலெட்சுமி, தானியலெட்சுமி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)