நிக்கோலோ பாகானீனி

நிக்கோலோ பாகானீனி (இத்தாலியம்: Niccolò Paganini; கிரேக்கம்: Νικολό Παγκανίνι; தோர்கம்: Nikkolo Paqanini) என்பவர் இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், வியோலக் கலைஞர், கிதார் கலைஞர் மற்றும் இசை அமைப்பாளர். இவர் 1782ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 27ஆம் தேதி பிறந்து 1840ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் தேதி மறைந்தார். இவரது காலத்தில் இவர் ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞராக திகழ்ந்தார். இவரது புகழ் இன்றும் நிலைத்துள்ளது. இவரது வயலின் வாசிக்கும் வழிமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகிறது. இவர் பல முக்கிய இசையமைப்பாளர்களுக்கு இன்றும் ஒரு தூண்டுதலாக, வழிகாட்டியாக உள்ளார். இவரது இசையமைப்புகள் பலவும் இன்றும் பலரால் வாசிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலோ_பாகானீனி&oldid=2916477" இலிருந்து மீள்விக்கப்பட்டது