நிரஞ்சன் பட்நாயக்கு

இந்திய அரசியல்வாதி

நிரஞ்சன் பட்நாயக்கு (Niranjan Patnaik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் அனந்தபூரில் இவர் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிரச்பந்து பட்நாயக்கு என்பதாகும். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் ஒடிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் ஒடிசா மாநிலத்தின் முன்னாள் அமைச்சராகவும், சமூக சேவகராகவும் இருந்தார்.[1]

நிரஞ்சன் பட்நாயக்கு
Niranjan Patnaik
ஒடிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழு தலைவர்
பதவியில்
19 ஏப்ரல் 2018 – 23 மே 2022
பின்னவர்சரத்து பட்நாயக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 பெப்ரவரி 1948 (1948-02-22) (அகவை 76)
அனந்த்பூர், ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்புவனேசுவரம்

மேற்கோள்கள் தொகு

  1. "Congress remains divided in Orissa over the new state chief". தி எகனாமிக் டைம்ஸ். 8 June 2011. பார்க்கப்பட்ட நாள் 16 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_பட்நாயக்கு&oldid=3807042" இலிருந்து மீள்விக்கப்பட்டது