நீதித்தலைவர்கள்

நீதித் தலைவர்கள் (பழய வழக்கு: நியாயாதிபதிகள்) என்பவர்கள் விவிலியத்தின் படி துவக்க காலத்தில் இஸ்ரயேலருக்கு நீதியரசர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் வாழ்ந்து இஸ்ரயேல் மக்களை எதிரிகளின்கையினின்று காத்தவர்கள் ஆவர்.[1]

யோசுவாவின் தலைமையின் கீழ் இஸ்ரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் இஸ்ரயேலருக்கு தலைவராக இருந்தனர். இவ்விடைப்பட்ட காலத்தில் அரசு ஏதும் இருக்கவில்லை. தேவை ஏற்படும்போது இவர்கள் போரிலும், பிற வழக்குகளிலும் தலைமை தாங்கினர்.[2] இவர்களுள் பெரும்பாலோர் வலிமை மிகு வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.

விவிலியத்தில் பெயர் குறிக்கப்பட்டுள்ள நீதித்தலைவர்கள் தொகு

நீதித் தலைவர்கள் நூலில் குறிக்கப்பட்டுள்ளவர்கள்:

  • ஒத்னியேல் 3:7-11
  • ஏகூது 3:12-30
  • சம்கார் 3:31
  • தெபோரா 4:1-5:32
  • கிதியோன் 6:1-8:35
  • அபிமெலக்கு 9:1-57
  • தோலா 10:1-2
  • யாயிர் 10:3-16
  • இப்தாகு 10:17-12:7
  • இப்சான் 12:8-10
  • ஏலோன் 12:11-12
  • அப்தோன் 12:13-15
  • சிம்சோன் 13:1-16:31

1 சாமுவேல் நூலில் குறிக்கப்பட்டுள்ளவர்கள்:

சாமுவேலின் புதல்வர்கள் புதல்வர்கள் பொருளாசகைகு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை. இதனால் வெறுப்படைந்த இஸ்ரயேலின் பெரியோர் ஒன்று கூடி சாமுவேலிடம் வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமிக்க வேண்டினர்.

மேற்கோள்கள் தொகு

  1. நீதித்தலைவர்கள் - முனைவர் பேரருள்திரு அ. ஸ்டீபன்
  2. Kitchen, Kenneth A. (2003), On the Reliability of the Old Testament (Grand Rapids, Michigan. William B. Eerdmans Publishing Company)(ISBN 0-8028-4960-1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதித்தலைவர்கள்&oldid=2731690" இலிருந்து மீள்விக்கப்பட்டது