நீலேஸ்வரம்

நீலேஸ்வரம் பேரூராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இதை நீலேஸ்வர் என்றும் அழைப்பர். இந்த பேரூராட்சி, நீலேஸ்வரம் புழா, தேஜஸ்வினி புழா ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில் உள்ளது. இங்கு கானாயி குஞ்ஞிராமன், காவ்யா மாதவன், சனுஷா ஆகியோர் வாழ்ந்துள்ளனர்.

நீலேஸ்வரம்
நீலேஸ்வரம்
பேரூராட்சி
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
அரசு
 • நிர்வாகம்நீலேஸ்வரம் பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்14.14 km2 (5.46 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்24,787
 • அடர்த்தி1,800/km2 (4,500/sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
671314
தொலைபேசிக் குறியீடு0467
வாகனப் பதிவுKL-60

பெயர்க் காரணம் தொகு

சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. சிவனின் நினைவால் நீலகண்டேஸ்வரம் என அழக்கப்பட்டு, நீலேஸ்வரம் என மாறியதாக கருதுகின்றனர். நீலா என்ற முனிவர் பல ஆண்டுகளுக்கு முன்னர், சிவனின் சிலையை நிறுவியதால் நீலேஸ்வரம் என பெயர் பெற்றதாக சொல்வோரும் உளர்.

மொழி தொகு

இங்கு வாழும் மக்கள் மலையாளம் பேசுகின்றனர். கவுட சாரஸ்வத் பிராமணர்கள் கொங்கணி மொழியை பேசுகின்றனர்.

அருகில் உள்ள ஊர்கள் தொகு

  • நிடுங்கண்டா
  • படிஞ்ஞாற்றங்கொழுவல்
  • மூலப்பள்ளி
  • கிழக்கன்கொழுவல்
  • சாத்தமத்து
  • தைக்கடப்புறம்
  • கடிஞ்ஞுமூலை
  • கோட்டப்புறம்
  • பள்ளீக்கரை
  • பாலாயி
  • சிறைப்புறம்
  • பேரோல்
  • காரியங்கோடு
  • ஆலகீழில்
  • தட்டாச்சேரி
  • வட்டப்பொயில்
  • ஆனச்சால்

கேலரி

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நீலேஸ்வரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலேஸ்வரம்&oldid=3777459" இலிருந்து மீள்விக்கப்பட்டது