நெசவுத் தொழிற்துறை

நெசவுத் தொழிற்துறை (Textile industry) என்பது முதன்மையாக ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிற்துறை நிறுவனங்களுக்காகவும், அதே போன்று ஜவுளிகள் வழங்கல் மற்றும் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும்.

பருத்தி நிலை தொகு

உற்பத்தி செயலாக்கங்கள் இயந்திரமயமாவதற்கு முன்னர், வீட்டிலேயே துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன எஞ்சியவை கூடுதல் பணத்தேவைக்காக விற்கப்பட்டன. பெரும்பாலும் துணியானது காலகட்டம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றினைப் பொறுத்து கம்பளி, பருத்தி அல்லது சணல் நார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக இடைக்காலத்தின் பிற்பகுதியில் பருத்தியானது வட ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இழையாக அறியப்படுகிறது. இது ஒரு தாவரம் என்பதைத் தவிர வேறு எதுவும் எவரும் அறிந்திருக்கவில்லை. கம்பளியுடன் இதற்கு இருக்கும் ஒத்த தன்மைகள் கவனிக்கப்பட்டன. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் தாவரம் விளைவிக்கும் செம்மறி ஆட்டின் மூலமாக பருத்தி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்திருந்தனர். ஜான் மாண்டேவில்லே (John Mandeville) 1350 ஆம் ஆண்டில் எழுதிய தற்போது பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கையாகக் கருதப்படும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "அவர்கள் [இந்தியா] விந்தையான மரத்தினை வளர்க்கின்றனர். அதன் கிளைகளின் இறுதியில் சிறிய செம்மறி ஆட்டுக் குட்டி வளர்ந்திருக்கிறது. அந்தக் கிளைகள் அந்தச் செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்குப் பசியெடுத்தால் வளைந்து கீழே இருக்கும் உணவை உண்ணுவதற்கு வசதியாக வளைக்கூடியதாக இருக்கின்றன." இந்த அம்சம் ஜெர்மன் பாம்வொல்லெ போன்ற பல ஐரோப்பிய மொழிகளில் பருத்தியின் பெயராக நீடிப்பதற்குக் காரணமாகியது. அந்தப் பெயரை "மரக் கம்பளி" என்று மொழிபெயர்க்கலாம். 16 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பருத்தியானது ஆசியா மற்றும் அமெரிக்காஸ் ஆகிய இடங்களில் இள வெப்ப மண்டலங்கள் முழுவதும் பயிரிடப்பட்டன. ரோமானிய காலகட்டங்களில் கம்பளி, நாரிழை மற்றும் தோல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட ஆடைகளை ஐரோப்பிய மக்கள் அணிந்தனர். இந்தியாவின் பருத்தியானது இயற்கை விரும்பிகளுக்கு மட்டுமே உந்துதலை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. சீனாவில் இருந்து பட்டுப் பாதை வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பட்டானது வரம்பு கடந்த பகட்டு மிக்கதாக இருந்தது. புதிய கற்காலத்திற்கு முந்தைய காலகட்டங்களில் வட ஐரோப்பாவில் உடை உற்பத்தியில் சணல் நார் இழை பயன்படுத்தப்பட்டது.

துணி வீட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் மிகுதியான நெய்யப்பட்டத் துணியானது துணி வியாபாரிகள் என்றழைக்கப்படும் வர்த்தகர்களுக்கு விறகப்படுகிறது. அவர்கள் கிராமத்திற்கு பொதிக் குதிரைகளின் படையுடன் வருகைத் தருகின்றனர். துணிகளின் சிலவற்று அதேப் பகுதியில் வசிக்கும் மக்களுக்காக தயாரிக்கப்படுகிறது மேலும் பெரும் தொகையான துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

துணியினைத் தயாரிக்கும் வழிமுறை சிறிதளவு அதற்காக பயன்படுத்தப்படும் இழையினைச் சார்ந்துள்ளது, ஆனால் மூன்று முக்கிய படிகளாவன: இழைகளை நூற்க தயாரித்தல், நூற்றல் மற்றும் தறியிடுதல் அல்லது பின்னலிடுதல் ஆகியவையாகும். இழையின் பயன்பாட்டைப் பெரும்பாலும் பொறுத்து இழையின் தயாரிப்பு வேறுபடுகிறது. சணலுக்கு நனைத்தல் மற்றும் ஒப்பனை தேவைப்படுகிறது, அதேப்போல கம்பளிக்கு சிக்கெடுத்தல் மற்றும் கழுவுகதல் தேவைப்படுகிறது. இருப்பினும் கூட நூற்றல் மற்றும் தறியிடுதல் வழிவகை இழைகளுக்கிடையில் மிக ஒற்றுமை வாய்ந்தவையாகும்.

நூற்றல் கையினால் இழைகளை திரிப்பதிலிருந்து உருவாகியது, அது சிறிதளவு நூற்புக் கதிராக ஒரு நூற்பு சக்கரத்தில் பயன்படுத்தப்படுகிறது. நூற்புக் கதிர்கள் அல்லது அவற்றின் பாகங்கள் மிகப் மிகப் பழமையான அகழ்வாராய்ச்சி இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன; அவை மனித இனத்திற்கு கிடைத்த முற்காலத்திய தொழில்நுட்ப எடுத்துக் காட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவை இந்தியாவில் கி.பி. 500 மற்றும் 1000 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கண்டுபிடிக்கப்பட்டன. அது ஐரோப்பாவை, மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவின் இடைக்காலங்களில் அடைந்தது.[1]

தறியிடுதல் கட்டுத்தறியில் ஏறத்தாழ நூற்பு இருக்கும்வரை செய்யப்பட்டது. பழங்கற்காலத்தில் ஏற்கனவே தறியிடுதல் அறியப்பட்ட்டிருந்தது என்பதற்கான சில அடையாளங்கள் இருந்தன. மொராவியாவின் பாவ்லவ்வில் தனித்ததொரு நெசவு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கற்காலத்தைச் சார்ந்த நெசவுகள் சுவிட்சர்லாந்தின் தோண்டற் குவியல்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டது. இன்னும் அழிவுறாத புதிய கற்கால துண்டுத்துணி கிறிஸ்துவுக்கு முந்தைய சகாப்தத்திற்கு சுமார் 5000 ஆண்டுகளை கடந்து காலங்குறிக்கப்பட்டதானது, ஃபாயூம் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. பலவிதமான கட்டுத்தறிகள் உள்ளன, அவை வைகிங்ஸ்சின் காலத்திலிருந்த எளிமையான கட்டுத்தறி முதல் நிலைத்த தரைக் கட்டுத்தறிவரை நீடித்துள்ளன.

தொழிற் புரட்சியின் போதான வரலாறு தொகு

18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலான முக்கிய பிரிட்டிஷ் தொழில் நெசவு உற்பத்தியாகும். அவை மத்திய இங்கிலாந்து மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிடைத்த கம்பளியிலிருந்து தயாரிக்கப்பட்டன. கம்பளிகள் பெரும் செம்மறி ஆட்டுப் பண்ணைகளிலிருந்து கிடைத்தன (அது நிலம் கிடைத்ததாலும் அருகாமைப் பகுதிகளின் இருப்பினாலும் ஏற்பட்ட விளைவுகளால் உருவாக்கப்பட்டன). கைத்தறிகள் மற்றும் நூற்புச் சக்கரங்கள் குடிசைகளிலிருந்த நெசவாளர்களின் வியாபாரக் கருவிகளாக இருந்தன, மேலும் இந்த ஆழமான மனித உழைப்புடைய நடவடிக்கை பிரிட்டன் முழுதும் வேலை வாய்ப்பினை அளித்தது, அத்தோடு பெரும் மையங்களாக வெஸ்ட் கண்ட்ரி, நார்விச் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் வெஸ்ட் ரைடிங் ஆஃப் யார்க்ஷையர் ஆகியன இருந்தன. கம்பளிப் பொருட்களின் ஏற்றுமதி 18 ஆம் நூற்றாண்டின் பெரும் காலப்பகுதியிலான பிரிட்டிஷ் ஏற்றுமதிகளின் ஒரு காற்பகுதிக்கும் அதிகமானதைக் கொண்டிருந்தது. அது 1701 மற்றும் 1770 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இரட்டிப்பானது [3]. லங்காஷையரை மையமாகக் கொண்டிருந்த பருத்தித் தொழிலின் ஏற்றுமதியானது இக்காலத்தில் பத்து மடங்கு அதிகரித்தது, ஆனால் இன்னும் கூட கம்பளி வர்த்தகத்தின் மதிப்பில் பத்தில் ஒரு பங்கினை மட்டுமே கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டிருந்தது.

நெசவுத் தொழில் 18 ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சியிலிருந்து வளர்ந்தது, அப்போது துணியின் பேரளவிலான உற்பத்தி முக்கியத் தொழிலாக ஆகியது. 1733 ஆம் ஆண்டில் அதிவேக நெவுத்தறியின் கண்டுபிடிப்பிலிருந்து பல கண்டுபிடிப்புகள் நெசவு உற்பத்தியின் வழிமுறைகளை வேகப்படுத்தச் செய்யப்பட்டன. 1738 ஆம் ஆண்டு லூயிஸ் பால் மற்றும் ஜான் வியாட் ஆகியோர் உருளும் நூற்பு இயந்திரத்தை காப்புரிமைச் செய்தனர் மற்றும் ஃபிளையர்-அண்-பாப்பின் அமைப்பினை காப்புரிமைச் செய்தனர். லூயிஸ் பால் ஒரு சிக்கெடுக்கும் இயந்திரத்தை 1748 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார், மேலும் 1764 ஆம் ஆண்டு வாக்கில் நூற்பு இயந்திரமும் கூட கண்டுபிடிக்கப்பட்டது. 1771 ஆம் ஆண்டில், ரிச்சர்ட் ஆர்க்ரைட் நீர்ச்சக்கரங்களை பருத்தித் துணி உற்பத்திக்கு மின் கட்டுத்தறிகளில் பயன்படுத்தினார். அவரது கண்டுபிடிப்பு நீர்ச் சட்டம் என்றறியப்பட்டது. 1784 ஆம் ஆண்டு, எட்மண்ட் கார்ட்ரைட் மின் கட்டுத்தறியைக் கண்டு பிடித்தார். நூற்பு மற்றும் தறி வழிமுறைகளுடன் தற்போது இயந்திரமயமாக்கப்பட்டதுடன், பருத்தி ஆலைகள் இங்கிலாந்தின் வட மேற்கு முழுதும் கிளர்ந்தன, மிகக் குறிப்பாக மான்செஸ்டர் மற்றும் அதன் சுற்றுப்பகுதி நகரங்களான ஆஷ்டன்-அண்டர்-லின், ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் டுகன்ஃபீல்ட் ஆகியவற்றில் எழுந்தன.

நெசவு ஆலைகள் மூலாதாரமாக அவற்றிற்கான சக்தியை நீர்ச் சக்கரங்களிலிருந்து பெற்றன, ஆகையால் ஒரு நதிக்கரையினூடாக அவை அமைந்திருக்க வேண்டியிருந்தது. நீராவி பொறியின் கண்டு பிடிப்பினால், 1760 ஆம் ஆண்டுகளிலிருந்து 1800 ஆம் ஆண்டுகள் வரை ஆலைகள் நதிகரையோரங்களில் அமைந்திடுவதற்கான தேவையிருந்ததில்லை.

தொழிற் புரட்சிக்குப் பின்... தொகு

அமெரிக்காவின் லோவெல் எம் ஏ விலிருந்தது போன்றதான முறையில், பல பருத்தி ஆலைகள் மூலாதாரமாக உள்ளுர் பண்ணைகளில் வேலைப் பார்த்து வந்த கூலிப் பெண்களை ஒரு சில ஆண்டுகளுக்கு பணிக்கமர்த்தும் நோக்கோடு துவங்கின. ஆலைப்பணியானது அவர்கட்கு ஒரு சிறிதளவு அதிகப் பணத்தை அவர்கள் மீண்டும் பண்ணை வாழ்க்கைக்கு திரும்பச் செல்லும் வரையில் கொடுக்க வடிவமைக்கப்பட்டது. உருளைக் கிழங்கு பஞ்சத்தின் போது அயர்லாந்திலிருந்து குறைந்த கூலிக்கான ஆட்கள் உள் நுழைந்தப்போது அமைப்பு மாறியது, அப்போது பெண்கள் எளிதாக மாற்றக்கூடியவர்களாக ஆயினர். பருத்தி ஆலைகள் தறிகளின் கனத்த சங்கிலி சலசலப்பு போன்றதான ஓசையை முழுமையாகக் கொண்டிருந்தன, அதேப்போல பஞ்சுத் துணி மற்றும் பருத்தி இழை ஆகியவற்றிலும் இருந்தது. ஆலைகள் முதலில் கட்டப்பட்டப்போது ஒரு தொழிலாளி ஒன்று முதல் நான்கு தறிகள் வரையில் எங்கிருந்தும் வேலைச் செய்யலாம். தறியின் வடிவமைப்பு மேம்பட்டப்போது ஒரு நூலறுந்தப் போகையில் அது தன்னை தானாகவே நிறுத்திக் கொண்டது, மேலும் தானியங்கியாக ஓடத்தை மறு நிரப்பிக் கொண்டது. மேலும், ஒரு தொழிலாளி 50 தறிகள் வரை வேலைச் செய்ய முடிவதாக அதிகரித்தது.

மூலாதாரத்தில், மின் தறிகள் நாடாவால் இயக்கப்பட்டன, ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதியில் வேகமான மற்றும் அதிகத் திறனுடைய நாடாக்கள் பயன்பாட்டிற்குள் வந்தன. இன்று, தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஒரு வகையான தறிகளை குறிப்பிடத் தகுந்த வகையான மூலப்பொருட்களின் உற்பத்தியினை அதிகரிக்க வடிவமைத்து உருவாக்கியுள்ளன. இவற்றில் மிகப் பொதுவானவை பீற்று நீராவித் தறிகள் மற்றும் நீர்த்தாரை தறிகளாகும். தொழிற்சாலைத் தறிகள் ஒரு நொடிக்கு ஆறு வரிசைகளையும் அத்தோடு வேகமாகவும் நெசவு செய்யும்.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ந்த உலகின் தொழிற்துறை ஒரு மோசமான புகழை உருவாக்கிக் கொண்டன. அவை பிற நாடுகளிலிருந்து குடியேறும் மக்களை, சட்ட விரோதமான "வேர்வைக் கொட்டும் பணிச் சூழலில்" இருந்த ஆலைப்பணிகளில் ஈடுபடுத்தின. அம்மக்களை நெசவு உற்பத்தியில் மற்றும் தையற் இயந்திரங்களில் வேலைச் செய்யும் நபர்களை முழுமையாகக் கொண்ட, குறைந்தப் பட்சக் கூலியை விட குறைவாகக் கூலியளிக்கப்பட்ட ஆலைப் பணிகளில் ஈடுபடுத்தியது. இந்தப் போக்கு தற்போது இருந்து வரும் தொழிற்கூடங்களை, வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஏற்பட்ட சவால்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளின் காரணங்களை விளைவித்தது. அச்சவால்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மிகச் சமீப கால மத்திய அமெரிக்கா ஆகியவற்றினால் ஏற்பட்டன. அதே போல உலகமயமாக்கல் கடல் கடந்த தொழிலாளர் சந்தைகளுக்கு உற்பத்தியை புறப்பணி முறையில் கொண்டு செல்வதைக் காண்கையில், வர்த்தகத்துடன் வரலாற்று ரீதியில் தொடர்புடைய பகுதிகளில், மென் பணி (white collar ) தொடர்பான தொழில்களான நவீன பாணி ஆடை வடிவமைப்பு, நவீன பாணி ஆடை ஒப்புரு மற்றும் சில்லறை வணிகம் மீது அதிக கவனம் திருப்பும் போக்கு ஒன்றுள்ளது.

வரலாற்று ரீதியாக கடுமையாக "நவீன பாணி ஆடை வர்த்தகத்தில்" ஈடுபட்டுள்ள இடங்களில் ஐரோப்பாவின் லண்டன் மற்றும் மிலன், நியூயார்க் நகரின் சோஹோ மாவட்டம், ஃபிலிண்டர்ஸ் லேன் மற்றும் ரிச்மண்ட் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  • Cotton: Origin, History, Technology, and Production By C. Wayne Smith, Joe Tom Cothren. Page viii. வெளியீடு 1997 ஜான் வைலி அண்ட் சன்ஸ் Technology & Industrial Arts. 864 pages. ISBN 0471180459.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெசவுத்_தொழிற்துறை&oldid=3860166" இலிருந்து மீள்விக்கப்பட்டது