நெஞ்சில் ஓர் ஆலயம்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெற்றித்திரைப்படமாகும். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவிகா, வி. எஸ். ராகவன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும். இத்திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

நெஞ்சில் ஓர் ஆலயம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
'சித்ராலயா' கோபு[1]
இசைவிஸ்வநாதன், ராமமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
கல்யாண் குமார்
தேவிகா
குட்டி பத்மினி
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுவின்செண்ட்
கலையகம்சித்ராலயா பிக்சர்ஸ்
வெளியீடு1962
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படம் பிரபல ஆங்கில படமான 'காசாபிளாங்கா’வின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாகும்.[2]

கதைக்கரு தொகு

காதலர்களான கல்யாண்குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.கல்யாணப் பரிசு திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குநர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடல்கள் நெஞ்சில் ஓர் ஆலயம்
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

பாடல்கள்[5]
# பாடல்பாடியவர்(கள்) நீளம்
1. "எங்கிருந்தாலும் வாழ்க"  ஏ. எல். ராகவன் 03:16
2. "என்ன நினைத்து என்னை"  பி. சுசீலா 03:30
3. "முத்தான முத்தல்லவோ"  பி. சுசீலா 03:35
4. "நினைப்பதெல்லாம்"  பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:28
5. "ஒருவர் வாழும் ஆலயம்"  எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் 03:43
6. "சொன்னது நீதானா"  பி. சுசீலா 03:35

மறுவாக்கம் தொகு

ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில் தில் ஏக் மந்திர் (1963) என்னும் பெயரில் இயக்குனர் ஸ்ரீதர் இந்தியில் இயக்கினார்.[6] குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் மானசி மந்திரம் (1966) என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னடத்தில் குங்கும ரக்சி என்னும் பெயரில் வெளியானது.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Malathi Rangarajan (20 February 2009). "Saga of success". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413131448/http://hindu.com/thehindu/fr/2009/02/20/stories/2009022050710400.htm. பார்த்த நாள்: 11 ஏப்ரல் 2014. 
  2. "முக்கோணக் காதல் கதைகளின் மன்னன்". இந்து தமிழ். 22 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2020.
  3. Malathi Rangarajan (8 October 2010). "A virtuoso recalls". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101013212849/http://www.hindu.com/fr/2010/10/08/stories/2010100850460100.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014. 
  4. M.L. Narasimham (20 October 2000). "Unforgettable screen mother". The Hindu. http://www.hindu.com/2000/10/20/stories/09200226.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Nenjil Oru Aalayam — Tracklist". raaga.com.
  6. Deepak Mahaan (29 January 2010). "Blast from the Past: Dil Ek Mandir (1963)". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131110191750/http://www.hindu.com/fr/2010/01/29/stories/2010012950180400.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014. 

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சில்_ஓர்_ஆலயம்&oldid=3724417" இலிருந்து மீள்விக்கப்பட்டது