நைனா தேவி (Naina Devi) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு அமைந்த பார்வதிக்கான நைனா தேவி கோயில் புகழ் பெற்றது. இந்த இடம் சண்டிகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மாதா நைனா தேவி
நகரம்
நைனா தேவி கோயில்
நைனா தேவி கோயில்
மாதா நைனா தேவி is located in இமாச்சலப் பிரதேசம்
மாதா நைனா தேவி
மாதா நைனா தேவி
இமாச்சலப் பிரதேசதில் அமைவிடம்
மாதா நைனா தேவி is located in இந்தியா
மாதா நைனா தேவி
மாதா நைனா தேவி
மாதா நைனா தேவி (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°18′22″N 76°32′11″E / 31.3060277°N 76.5363944°E / 31.3060277; 76.5363944
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்பிலாசுப்பூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,204
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகஇந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,161 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 63% ஆண்கள், 37% பெண்கள். சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நைனா தேவி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்நகரில் உள்ள நைனா தேவி மலைக்கோயில் சிறப்பு வாய்ந்ததாகும்.

நைனா தேவி கோயில் தொகு

ஸ்ரீ நைனா தேவி கோயில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் 21ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்வதற்கு மலையைச் சுற்றிய சாலை வழியே சிறிது தொலைவு சென்று பின்னர் படி வழியே ஏறி செல்ல வெண்டும். அத்துடன் உச்சி வரை செல்வதற்கு வடச் சீருந்து வசதியும் உண்டு. கருவறையில் உள்ளே தேவி கல் (பிண்டி) வடிவில் உள்ளார். தேவியின் கண்களை மட்டுமே தரிசனத்தில் காண முடியும். கருவறையின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தபட்டு பளபளப்பாக இருக்கும். உள் விமானம் பிரமீட் வடிவில் இருக்கும். இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள அரச மரத்தில் வேண்டுதலுக்காக பக்தர்கள் மணிகளைக் கட்டுகின்றனர்.

3, ஆகத்து, 2008 நெரிசல் தொகு

ஆகஸ்ட் 3, 2008 இல் இக்கோயிலில் திடீரென இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 146 பேர் கொல்லப்பட்டனர். 'நவராத்ரா' என்ற பண்டிகையையொட்டி, இக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலைப் பகுதியில் சுமார் 4 கிமீ தொலைவுக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பாதையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்களும் இருந்தனர்.

அப்போது, அருகேயுள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் கீழ் நோக்கி உருண்டு வருவதாக பக்தர்களிடையே வதந்தி பரவியது. இதையடுத்து, பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடும்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் உடைந்து விழுந்ததில் பலர் தடுப்புக் கம்பிகளை தாண்டி மலைப்பகுதியில் விழுந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதித்ததில் 146 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர்; 50 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 30 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்[2].

மேற்கோள்கள் தொகு

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  2. "'இமாச்சல்: நெரிசலில் சிக்கி 146 பக்தர்கள் பலி!". யாஹூ! வழியாக வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் 2008-08-03.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனா_தேவி&oldid=3824326" இலிருந்து மீள்விக்கப்பட்டது