நொச்சிமுனை

நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

நொச்சிமுனை
நொச்சிமுனை
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை[1] என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.

நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

உசாத்துணை தொகு

  1. "மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் வீதி புனரமைப்பு". Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமுனை&oldid=3561277" இலிருந்து மீள்விக்கப்பட்டது