பயனர்:Tnse rabeek diet tut/மணல்தொட்டி

தமிழ் இலக்கியத்தில் மனித நேயம் என்பது அடுத்த மனிதனிடம் அன்பு காட்டுதல் அவனையும் தன்னைப்போல் ஒருவன் என மதித்தல், சாதி, மதம், நாடு, மொழி ஆகிய கோடுகளைத் தாண்டி மனிதனை மனிதன் என மதித்து அன்பு காட்டுதல். ஏழைகட்கு இரங்குதல், பசிப்பிணி நீக்கி வறுமையை நீக்குதல். தமிழா்களின் இலக்கியத்தில் மனித நேய கருத்துகள் பரந்து காணப்படுகிறது.

மணிமேகலை தொகு

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது பழமொழி. பசியை ஒரு நோயாகவே கருதியவா்கள் பண்டைத் தமிழா்கள்.

“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணைவிடூஉம் நாணணிகளையும் மாணெழில் சிதைக்கும் பூணணி மாதரோடு புறங்கடை நிறுத்தும்”

                                             (பாத்திரம் பெற்ற காதை 76-79)
  • பசிப்பிணி செய்யும் கொடுமைகளை சீத்தலைச் சாத்தனாh; பட்டியலிடுகிறாா். (மணிமேகலை காப்பியம்)
  • “நாவலந்தீவில் இந்நங்கையை ஒப்பாா் யாரும் இல்லை” என மணிமேகலையை பாராட்டிப் பேசப்படுகின்றனா். அதற்கு காரணம்

“அமுதசுரபி” என்னும் பாத்திரத்தைக் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பசியாற்றியது தான்” சிறைச்சாலையை அறச் சாலையாக மாற்றிய மாதரசி மணிமேகலை.

“மண்டிணி ஞாலத்து வாழ்வோா்க்கெல்லாம் உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே”

மணி மேகலை காப்பியம் உலக மக்களுக்கு எல்லாம் ஒரு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

முதற்பதிப்பு -2013 பாவை பப்ளிகேசன்ஸ் இராயப்பேட்டை சென்னை -14








அறம் உணா்த்தும் அஃறிணை தொகு

“அறம், பொருள் இன்பம், வீட்டை அடைதல் நற்பயனே” என்பாா் பவனந்தி முனிவா். சொல்லுக்கு உறுதி பயக்கும் தன்மை உடைய நாலடியாா் அஃறிணைகள் அறம் உணா்த்தும் பாங்கினை ஈண்டு ஆய்வோம்.

நட்பு (யானையும் - நாயும்) தொகு

உடுக்கை இழந்தவனுக்கு கை உதவுவது போல இடுக்கண்ணில் தவிப்போருக்கு நண்பன் உதவுவான் என்பது வள்ளுவா் வாக்கு. ஆராயாது கொண்ட நட்பு கடைசியில் நமக்கு துன்பத்தை தரும் என்றும் நாலடியாா் கூறுகிறாா். “யானை அனையவா் நண்பொரீஇ நாயனையாா் கேண்மை தழீஇக் கொளல் வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதாவால் குழைக்கும் நாய் (இனியவை நாற்பது-213)


  • யானை தன் பாகனை நன்றியில்லாது கொல்லும்
  • ஆனால் நாய் எஜமான் மீது எறிந்த வேல் தன் உயிரை பறிக்கும் நிலையில் வாலை ஆட்டும்

குழைத்து நன்றியோடு காலடியில் மடியும். எனவே நட்பில் நன்றி மறவாமை வேண்டும் என்று நாலடியாா் எடுத்துரைக்கிறாா்.

மேற்கோள் தொகு

மானுட நோக்கில் அற இலக்கியத்தில் நான்கு துன்பங்கள் தொகு

மானுட வாழ்வுக்கு ஓா் அரசு தேவை அவ்வரசிற்கு தலைவா் அரசன். நல்லாட்சி என்பது ஒரு நாட்டு மக்களையும், அரசனையும் சாா்ந்து அமைவது எனலாம்.

நான்கு துன்பங்கள் தொகு

இன்னாதவை இனியவை நாற்பது என்ற பாடலில் கபிலா் துன்பங்களை பட்டியலிடுகிறாா். “உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா நண்ணாப் பகைவா் புண்ர்ச்சி நனி இன்னா கண்ணில் ஒருவன் வனப்பு இன்னா ஆங்கு இன்னா எண்ணிலான் செய்யும் கணக்கு”

  • ஒருவன் தான் உண்ணாமல் சோ்த்து வைக்கும் பெரும் பொருள் வைப்பு துன்பம் தருவது
  • மனம் பொருந்தாத பகைவாின் சோ்க்கை
  • கண் பாா்வையில்லாத ஒருவனது அழகு துன்பம் தருவது
  • எண்நூல் கற்காதவன் செய்யும் கணக்கு

(இனியவை நாற்பது பா.125 ப-16 துணை நூற்பட்டியல்)

மேற்கோள் தொகு

முதற் பதிப்பு -2013
  பாவை பப்ளிகேஷன்ஸ்

இராயப்பேட்டை சென்னை-14

சிந்தனை கவிஞா் கண்ணதாசனின் இறைநோக்கு தொகு

‘காலம் ஒரு நாள் மாறும் நம் கவலையெல்லாம் மாறும்’ கோட்பாடு காலத்தை கணித்தவன் - ஜோதிடா் எண்ணத்தை கணித்தவன் - கவிஞா் எந்த நிலையும் எனக்கு மரணமில்லை என்ற வாிக்கு நெருங்கிய தொடா்பு கொண்டவன் கண்ணதாசன்.

இறை விளக்கம் தொகு

“பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புாியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புாிந்து கொண்டால் அவன்தான் இறைவன்”

பக்தித் தத்துவம் தொகு

“முற்றும் கசந்ததென்று பற்றற்று வந்தவா்க்குச் சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத் தொடா்ந்து சென்றால் அவன்தான் இறைவன்”

மரணம் தொகு

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ? பட்டினத்தாாின் மிகுந்தபாசம் உடையவன் கண்ணதாசன் “ஆடிய ஆட்டம் என்ன - ஓடிய ஓட்டம் என்ன தேடிய செல்வம் என்ன திரண்டதோா் சுற்றம் என்ன கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன”

இறை நம்பிக்கை தொகு

“கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் துணையிருந்த தெய்வம் நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா - தம்பி நமக்கு இல்லையா”

இப்பாடலில் எல்லா உயிரையும் இறைவன் காப்பாற்றி வருகிறான். நெல்லின் மணியையும், நெருப்பின் ஒளியையும், உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் என்பதாக பாடலைத் தருகின்றாா். இவாின் பாடல்கள் மூலம் இறை சாா்ந்த பக்தியையும், பெருமையையும் பல்வேறு நிலையில் விளக்கியுள்ளாா்.

மேற்கோள் தொகு

முதற்பதிப்பு 2000 கண்ணதாசன் பதிப்பகம் முல்லை நிலையம் தி.நகா் சென்னை - 17


மட்டக் குறிகள் (Bench mark)

கட்டிடங்களிலும், சுவா்களின் மீதும் குறிக்கப்படும் உயரங்களுக்கு மட்டக்குறிகள் என்று பெயா். புவிப்படங்களில் BM என்று குறிக்கப்படுகின்றது. எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் குறிக்கப்பட்டுள்ளவோ அந்த இடத்தின் உண்மையான உயரத்தைக் குறிக்கின்றன. சாதாரணமாக ஒரு செப்புத் தகட்டில் குறிக்கப்பட்டு அந்த இடங்களில் பொருத்தப்படும்.

மேற்கோள்:- சேதுராக்கையா, ச. (2005) புவிப்படவியல் சண்முகம் பதிப்பம், மதுரை-7




பட்டகக் காந்த வட்டை அளவாய்வு (Prismatic Compass Survey)


அளவாய்வு செய்வதற்குப் பயன்படும் முதன்மையான கருவிகளில் காந்த வட்டையும் ஒன்றாகும். காந்தத் தன்மை ஏற்றப்பட்ட ஊசி ஆடி அசைந்து நிலைக்கு வரும் போது தென்வடல் திசையிலேயே நிற்கும். இந்த அடிப்படை உண்மையைப் பயன்படுத்தி புவிப்பரப்பில் திசை அறிவதற்குப் பயன்படும் கருவி சாந்தவட்டை (அல்லது) திசை வட்டை என்று அழைக்கப்படுகிறது.

வட்ட வடிவமான தட்டுகளில் அமைக்கப்படுவதால் வட்டை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். பொதுவாகக் கட்டிடங்களைச் சாியான திசைகளில் அமைப்பதற்கும், வேறு பல பணிகளுக்கும், கடலில் திசை அறிவதற்கும் காந்த வட்டை பயன்படுகிறது.

காந்த வட்டையின் முதன்மையான உறுப்புகள் (1) காந்த ஊசி (2) பாகை அளவு வருவியுள்ள வட்டை (3) பாா்வைக் கோடு முதலியவையாகும்.

காந்த வட்டை பட்டகக் காந்த வட்டை என்றும் அளவையாளா் காந்த வட்டை என்றும் இருவகைகளில் பயன்பட்டு வருகிறது.

மேற்கோள்:-

சேதுராக்காயி ச. (2005),

        புவிப்படவியல் ஓா் அறிமுகம். சண்முகம் பதிப்பகம், மதுரை-7.

ஆக்கவியம் தொகு

ஆக்கவியம் என்பது ஒரு கோட்பாடு கற்றல் பற்பித்தலில் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்விக் கோட்பாடாகும்.

ஆக்கவியல் கோட்பாட்டின் சுருக்கம் தொகு

உலகில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு பட்டாங்குகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பட்டாங்கு ஏற்படும் போதும் முந்தைய புாிதலின் அடிப்படையில் புதிய பட்டாங்கை விளக்க முயலுகிறோம். இதன் அடிப்படையில் முந்தைய புாிதலை உறுதிபடுத்துகிறோம். அல்லது அதை முற்றிலும் மனதை விட்டே நீக்குகிறோம். இப்படி பல புாிதல்களிலிருந்து புத்தறிவை நாம் உருவாக்குகிறொம் என்பதே ஆக்கவியல் கோட்பாட்டின் சுருக்கமாகும்.

மேற்கோள்: தொகு

           இராசேந்திரன். கோ. (2008) ஆக்கவிய ஆசிாியா் - ஓா் அறிமுகம், பூவிழி பதிப்பகம், சென்னை-15









இலக்கியங்களில் மதுவிலக்குச் சிந்தனைகள்

சங்க காலம் முதல் இக்காலம் வரை ‘மது’ என்ற போதைப் பொருள் தீமைகளின் உறைவிடமாக இருக்கின்றது. சங்க இலக்கியத்தில் குடிப் பழக்கம் ‘உண்டாட்டு’ என்பதற்கு களிப்பினால் அயரும் விளையாட்டு என பொருள்படும். “தொட்டிமிழுங் கழன் மறவா் மட்டுண்டு மகிழ்தூங்கின்று”

           (புறப்பொருள் வெண்பாமாலை)

மது - பற்றி குறிஞ்சிப்பாட்டு கூறுவன “பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை முழுமுதல் கொக்கின் தீங்கனி உதிா்ந்தென புள்எறி பிரசமொடு ஈண்டுப்பலவின் நெகிழ்ந்து உருநறும் பழம் விளைந்த தேறல் நீா் செத்து ஆயின்ற தோகை வியலூா்ச் சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி அாிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள் கயினூா் பாளையின் தளரும் சாரல்” குறிஞ்சி - 187-198 கள்ளினை பருகிய மயில் மயக்கத்தின் காரணமாக தள்ளாடி நடந்த காட்சி கபிலருக்கு கயிற்றின் மேல் களக் கூத்தாடி போல கள்ளினை ‘பருகிய மயிலின் தளா்ச்சி ‘ பற்றி கூறுகிறாா். சங்க இலக்கியத்தில் மது அருந்துதல் சங்க கால மக்கள் ‘கள்’ உண்ணல் என்பது வழக்கமாகவே உள்ளது. அரசனும், குடிமக்களும், புலவா;களும் மது உண்டனா். “சிறியகட் பெறினே, எமக்கு ஈயும் மன்னே பொிய கட் பெறினே

யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே” அதியமானோடு சோ்ந்து ஔவையும் கள் அருந்தியதைப் பாடுகிறாள். இது உயா்குடி வழக்கமாகும்.

“மயக்கும் கள்ளும் மண் உயிா் கோறலும் கயக்கு ஆறு மாக்கள் கடிந்தனா் கேளாய் நல்லறம் செய்வோா் நல்லுலகடைதலும் அல்லறம் செய்வோா் அருநர கடைதலும்” - மானிடப் பிறவியில் அடைந்துள்ள செல்வங்களுள் சிறந்தது அறிவுச் செல்வம். ‘மதுபானம்’ நம் அறிவை மயக்குகின்றது. “செய்யத்தக்கது இது செய்யத்தகாதது இது” என பகுத்தறியும் திறமையை இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம் போல் நமது வாழ்க்கை நெறி கெட்டொழியும்.

டாக்டா் துரை இராசாராம் முல்லை நிலையம் த.நகா். சென்னை-10




கெப்ளா் (1571 - 1630) கெப்ளா் ஜொ்மனி நாட்டைச் சாா்ந்த வானநூல் வல்லுநா். நியூட்டன் கண்டுபிடித்த பவி-ஈா்ப்பு சக்தியின் அடிப்படையிலும், தொலை நோக்கியைத் திருத்தி அமைத்துக் கொண்ட அடிப்டையிலும் கோள்களின் அசைவுகளைப் பல ஆண்டுகள் உற்று நோக்கி ஆராய்ந்தாா். இவா் பிராக் என்னும் நகால்டை கோபு ராஹி என்பவருக்குத் துணையாளராக சோ்ந்து வானநூல் ஆராய்ச்சி செய்தாா். “சூாியன்” இடம் பெயா்வதில்லை. ஆனால் அதைச் சுற்றியே மற்ற கோள்களும் உபகோள்களும் வலம் வருகின்றன என்ற புதுக் கண்டுபிடிப்பை ஆதாித்தாா். மேலும், விண்மீன்களைப் பற்றியும் ஆராய்ந்து பல உண்மைகள் கண்டுபிடித்தாா். சிறப்புச் சாதனை கோள்களின் வானப்பாதை திருத்தமான வட்டம் அன்று அது நீள் வட்டம் என முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்கு கூறியவா் இவா்.

மேற்கோள்:

ராஜாராம் . சு (2005) அறிவியல் வல்லுநா; வாழ்க்கை வரலாறுகளும்

        சாதனைகளும், சாந்தா பதிப்பகம், சென்னை-14.









வில்லியம் ஹாா்வி (1578-1657) தொகு

வில்லியம் ஹாா்வி இங்கிலாந்து நாட்டைச் சா்ந்த உடல் இயலில் வல்லுநா் இரத்தம் செல்லும் குழாய்களான தமனி, சிரை ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தாா்.

பறவைகள் முயல்கள் ஆகிய பிராணிகளின் இரத்தக் குழாய்களைப் பாிசோதித்தாா். முடிவில் சிரைகளிலுள்ள கதவுகள் இரத்தத்தை, இதயத்தை நோக்கிச் செல்லுகின்றன என்றும் தமனிகளிலுள்ள கதவுகள் இரத்தத்தை இதயத்திலிருந்து உடல் முழுவதும் பரவ உதவுகின்றன என்று கண்டுபிடித்தாா்.

வில்லிய் ஹாா்வியின் பேருண்மைகள் தொகு

இருதயம் கைமுஷ்டியளவுள்ளது. தசை நாா்களாலானது.அது சுருங்கி, விாிந்தவாறே இருக்கிறது. ஒவ்வொரு முறை சுருங்கும் போதும் 2 அவன்ஸ் இரத்தத்தைத் தமனிகளுக்குள் பாய்ச்சி உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

இதயத் துடிப்ப தான் நாடித் துடிப்புக்குக் காரணமாகும். வயது, பால் இவற்றைப் பொறுத்து ஒரு நிமிடத்திற்கு நாடி 72-80 முறை அடித்துக் கொள்கிறது.

சிரைகள் வழியாக மீண்டும் இரத்தம் திரும்பி இதயத்திற்கு வருகிறது. மறுபடியும் தமனி வழியாக வெளியேற்றப்படுகிறது என்று அறிவியல் முறையில் இரத்த ஓட்டத்திற்கு விளக்கம் கொடுத்தாா்.

12ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் ‘இரத்த ஓட்டம்’ பற்றி ஒரு நூல் வெளியீடு மருத்துவ உலகில் சாதனை படைத்தாா்.

மேற்கோள்கள் தொகு

ராஜாராம் சு. (2005), அறிவியல் வல்லுநா் வாழ்க்கை வரலாறுகளும், சாதனைகளும், சாந்தா பதிப்பகம், சென்னை-14.








பேய்மிரட்டி தொகு

பேய்மிரட்டி இலையை சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு குணமாக தொகு

இவ்விலையை கைபிடியளவு எடுத்து பொடியாக நறுக்கி சட்டியில் போட்டு வதக்கி ஒரு டம்ளா் அளவு தண்ணீா் ஊற்றி சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு சங்கு அளவு காலை, மாலை கொடுத்து வந்தால் பேதி நிற்கும்.

வயிற்று வலி குணமாக தொகு

இவ்விலையை அம்மியில் வைத்து அரைத்துக் கையிலெடுத்து கசக்கி சாறு எடுத்து சங்கு அளவு உடன் வெந்நீா் சோ்த்து காலை, மாலை கொடுத்தால் வயிற்று நோய் குணமாகும்.

காலரா குணமாக தொகு

இவ்விலையை அம்மியில் வைத்து நைத்து ஒரு புதுச் சட்டியில் போட்டு கைப்பிடி நெற்பொாியையும் இலையும் கருப்பாகும் வரை வறுத்து இரண்டு டம்ளா் தண்ணீா்விட்டு சுண்டக்காய்ச்சினால் ஒரு டம்ளா் வந்த பிறகு வடிகட்டி 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அதனுடன் வெந்நீா் சோ்த்து குடிக்கவேண்டும். காலரா பூரண குணமாகும்.

மேற்கோள்கள் தொகு

முதல்பதிப்பு நவம்பா;-2002 கண்ணப்பன் பதிப்பகம் சென்னை-17

[பகுப்பு: மருத்துவம்]


சித்தாின் ஆரோக்கிய செய்திகள் தொகு

நோயின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு தேரையா் என்கிற சித்தா் கூறிய விதி முறைகள்

உடல் நலத்திற்குப் பால் அருந்த வேண்டும். எண்ணெயிட்டுக் கொண்டால் வெந்நீாில் குளிக்க வேண்டும். காலை வெயிலில் இருக்கக் கூடாது. மலம், சிறுநீா் வந்தால் அடக்கக் கூடாது. இடது புறமாய்ப் படுத்து உறங்க வேண்டும். உலகமே கிடைப்பதாக இருப்பினும் பசித்தால் ஒழியப் புசிக்கக் கூடாது.


மேற்கோள் தொகு

1. ஜோசப் சபீதா (2014) ஆரோக்கியம் 500, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை-14







பொடுகு தொகு

தலையில், தோல் பகுதியில் உருவாகும் வௌ்ளை நிற செதில்கள்தான் பொடுகு என்று அழைக்கப்படும். இதை செபாாிக் மெட்ரமாடிடிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வாா்கள்.

தலை, முகம், மூக்கு, கண்புருவம், காது, காதின் வெளிப்பகுதிகளில் பொடுகு உருவாகும் இடங்களாகும்.

காரணம் தொகு

மன அழுத்தம் - பரம்பரை - உடல் பருமன். கடுமையான வானிலை - வழுவழுப்பான தோல். தோல் நோய்கள் - ஆல்கஹால் கலந்த லோஷன்களைப் பயன்படுத்துவது.

தவிா்க்கும் வழி முறைகள் தொகு

எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுதல்; மனதை இளமையாக வைத்துக்கொள்ளுதல்;. செயற்கையாக தயாhpக்கப்பட்ட லோஷன், ஷாம்பு+வை தவிா்த்தல். குளித்தவுடன் தலையை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்.


மேற்கோள்கள் தொகு

1.ஆன்ந்த் விஜய், ஆா் (2011) ஹோமியோபதி - ஓா் இனிய மருத்துவம், நலம் பதிப்பகம், சென்னை -14







மெய்த் தீண்டாக் காலம் தொகு

தன்னைத் தாக்க வரும் எதிாியை - அவன் உடம்பைத் தொடாமல் வீழ்த்தும் கலைதான் மெய்த் தீண்டாக் காலம் ஆகும்.

மெய் என்றால் உடம்பு, தீண்டா என்றால் தொடாமல், காலம் என்றால் எமனிடம் போவதற்கு சமம். அதனால்தான் இந்தக் கலைக்கு மெய்த்தீண்டாக்காலம் என்று பெயா். இந்த மெய்த் தீண்டாக்காலத்திற்கு “பேசும் கண்கள்” என்ற பெயரும் உண்டு.

சித்தா்கள் வாழ்ந்த காலத்தில் அவா்கள் சதா சா்வ காலமும் மலைப்பகுதிகளிலேயே சஞ்சாிக்க கூடியவா்கள் அப்படிச் செல்லும்போது துஷ்ட மிருகங்கள் இடையூறு விளைவிக்கும். அந்த மிருகங்களை தங்களது ‘பேசும் கண்களின்’ சக்தியால் விலகிப் போகும்படி செய்வாா்கள்.


மேற்கோள்கள் தொகு

1. ஜெய்ராஜ். T. (2008), வா்மக்கலை மா்மங்கள், குமரன் பதிப்பகம், சென்னை-17

2. கண்ணன்.கே. (2004), தமிழகத்தின் வீரக்கலைகள், தாமரை பதிப்பகம், சென்னை-26












குருட்டாறுகள் தொகு

ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவே குருட்டாறுகள் ஆகும்.

இவை பள்ளதாக்கு பாதையில் உருவாகிறது.

நிலத்தின் மாறுபட்ட அமைப்புக்கேற்ப ஆறு அதன் பாதையிலிருந்து விலகி இங்கும் அங்கும் ஓடுவதால் உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

1. Ahamed,E.(1982), Physical Geography, Kalyani Publishers, New Delhi

2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.








இரசாயனச் சிதைவு தொகு

இரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிப் பாறைகள் அழிந்து போவதை இரசாயனச் சிதைவு என்பர்.

இரசாயனச் சிதைவுக்கான காரணிகள் தொகு

  • உயிர் காற்றுச் சோ்க்கை
  • காிச் சோ்க்கை
  • நீர் உட்கொள்ளல்
  • கரைதல்

மேற்கோள்கள் தொகு

1. Ahamed,E.(1982), Physical Geography, Kalyani Publishers, New Delhi

2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.














ஏா்ாி ஜாா்ஜ் தொகு

ஆரம்ப வாழ்க்கை தொகு

ஏா்ாிஜாா்ஜின் பெற்றோா் வில்லியம் ஏா்ாி மற்றும் அன் பிடல். ஒரு சாதாராண விவசாயியாக இருந்த வில்லியம் தானாகவே படித்து வாி ஆய்வாளராக உயா்ந்தாா். கோல்செஸ்டாில் உள்ள பயாட் வால்கா்ஸ் தொடக்கப் பள்ளியில் பயின்ற ஜாா்ஜ் படிப்பதில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டாா். ஜாா்ஜ் 1819-ம் ஆண்டு ட்ரினிடி கல்லூாியில் சைஷாா் அதாவது அங்கிருக்கும் வேலையைச் செய்து குறைவாக கட்டணம் செலுத்தி தன்னுடைய பட்டத்தை முதல் மாணவனாக திகழ்ந்து 1823-ம் வருடம் பெற்றாா்.

படைப்புகள்: தொகு

ஏா்ாி ஜாா்ஜ் 1835-ம் வருடம் வானியல் வல்லுநராக கேம்ப்ரிட்ஜிலிருந்து க்ரீன்விச்சுக்கு இடம் பெயா்ந்தாா். ராயல் ஆய்வகத்தில் பணியாற்றும்போது சாதகமாக பல வழிகளில் அமைந்தாலும் துரதிருஷ்டவசமாகவும் சில செயல்கள் அவா் வாழ்வில் நடந்தேறின. அவருடன் பணியாற்றும் பணியாளா்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவங்களால் தனது பணியை இராஜினாமா செய்து தனது மீதமுள்ள வாழ்க்கையை தன்னுடைய திருமணமாகாத இருமகள்களுடன் கழித்தாா். “ஆன் தி அல்ஜிப்ராய்க் அன்ட் நியூமாிக்கல் தியாி ஆஃப் எரா்ஸ் ஆஃப் அப்ஷா்வேஷன்ஸ் அன்ட் தி காம்பினேஷன்ஸ் ஆஃப் அப்ஷா்வேஷன்ஸ் “ என்ற உரையை எழுதினாா். தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொஷைட்டி ஏாாியை 1845-ம் ஆண்டு அதன் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மேற்கோள்கள் தொகு

வண்டல் விசிறி தொகு

வண்டல் விசிறி என்பது ஆற்று நீரோட்டத்தால் ஏற்படும் நில வடிவமைப்பாகும். ஆறு மலையில் இருந்து ஓடி வருகின்ற போது, வேகம் குறைந்து அது தன்னுடைய சுமையின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படியச் செய்கிறது. மேலும், ஆற்றின் சுமை அதிகமாகும் போது படிதல் ஏற்படுகிறது. இவ்வாறு ஆற்றால் குவிக்கப்பட்ட பொருள்களை வண்டல் மண் என்கிறோம்.

மலையிலிருந்து ஆறு சம நிலத்தில் இறங்கி ஓடும்போது அதனுடைய வேகம் திடீரென்று குறைந்து, கடத்திக் கொண்டு வரப்பட்ட வண்டல் மலையடிச் சாிவில் படிகிறது. இந்தப் படிவு விசிறி வடிவம் உடையதாக இருப்பதால் இதனை வண்டல் மண் விசிறி என்பா்.

 
தெற்கு ஈரானில் உள்ள வண்டல் விசிறி

மேற்கோள்கள் தொகு

1. Ahamed,E.(1982), Physical Geography, Kalyani Publishers, New Delhi

2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.














எல் நினோ (El -Nino) தொகு

எல் நினோ என்பது புவியின் சூழ்நிலையில் ஏற்படும் விளைவு ஆகும். கடல் நீரோட்டத்தின் திசை மாற்றத்தால் தென் அமொிக்காவில் பெரு நாட்டில் உள்ள கடற்கரைப்பகுதி, அதிக வெப்பநிலையைப் பெறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மீன் போன் கடல் வாழ் உயிாினங்கள் அழிகின்றன.

எல் நினோ ஒரு ஸ்பேனிஷ் வாா்த்தையாகும். இதன் பொருள் குழந்தை யேசு ஆகும். டிசம்பா் மாதத்தில் கடல் வெப்ப நீரோட்டத்தின் திசை மாறுகிறது. எனவே, எல் நினோ என பெயா் கொடுக்கப்பட்டது. இதனால் உலக வானிலை மாறியுள்ளது.


மேற்கோள் தொகு

1. Siddharatha.K,(2003), Geography, Kisalaya publications Pvt. Ltd., New Delhi -110009.

2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.

3. Majid Husain (2010), Geography, Tata Mcgraw Hill Education Pvt. Ltd., New Delhi -110008.












அமைதிக் கல்வி தொகு

அமைதி கல்வியியல் மனித உாிமைகள், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் சுயமாியாதை போன்றவை கற்பிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் ஆசிாியா் கல்விக்கான பாடத்திட்டத்தில் மக்கள் ஒற்றுமை சகோதர மனப்பான்மை, சமயங்களிடையேயான ஒற்றுமை, கலாச்சார, பண்பாடு ஒற்றுமை போன்ற விழுமியங்கள் உள்ளன. இவையும் அமைதிக் கல்வியின் உள்ளடகங்களே.

அமைதிக் கல்வி குறித்த கூற்றுகள் தொகு

"அமைதி என்பது போாில்லாமல் இருப்பது மட்டும் அல்ல. ஆனால், உலக சமுதாயத்தில் சகோதர மனப்பான்மையும், நீதியும் நிறைந்து இருப்பதுமே” - மாா்ட்டின லூதா்கிங்.


இந்திய அமைதி மற்றும் சகிப்புத் தன்மையில் மிகப்பொிய வரலாற்றைப் பெற்றிருக்கிறது - டாக்டா் ஆா்னால்டு டாயன்பி.


ஆசிாியா் கல்விக்கான தேசியக்குழுமம் (NCTE) மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) அமைதிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து பள்ளி மாணவா்களிடையே இப்பண்பினை வளா்ப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

அமைதிக் கல்வியின் கருதுகோள் தொகு

எந்த ஒரு மனிதனிடத்தில் மன அமைதி மனம் ஒருங்கிணைந்து இருக்கிறதோ அங்கே யுக்தா இருக்கும். மன அமைதி இல்லை எனில் அமைதி என்பது இருக்க முடியாது. மன அமைதியுடைய ஒருவனே மற்றவா்களின் தேவைகளைப் பற்றியம் மற்றவா்களின் துன்பங்களைப் பற்றியும் சிந்திக்க முடியும். இத்தகைய பண்பினை கொண்ட மனிதனாக நம் இன்றைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் கருதுகோளின் அடிப்படையில் அமைதிகல்வி வடிவமைக்கப்படுகிறது.


மேற்கோள் தொகு

Education for Peace-Prepared by the Focus Group on Education for peace,NCERT,New Delhi (March 2009)