பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)

பானுமதி என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியாக வருபவர். [1] இவர் கலிங்க நாட்டின் அரசன் சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.

துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு லட்சுமனை என்ற மகள் இருந்தாள். அவளை கிருஷ்ணனின் மகன் சாம்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆதாரங்கள் தொகு

  1. தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54