பிஜோ எம்மனுவேல் எதிர் கேரள மாநிலம்

பிஜோ எம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் (Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748)) இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம், கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும் உத்தரவிட்டது.

வழக்கு விவரம் தொகு

யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மதவழக்கப்படி எந்த தேசப் பண்ணையும் பாடு மாட்டார்கள். தங்கள் ஆண்டவரை தவிற வேறு எந்த மதச்சின்னத்திலும் ஈடுபாடு கொள்ளாதவர்கள். கேரளாவில் பிஜோ, பினு மோல், பிந்து எம்மானுவேல் ஆகிய மூன்று யெகோவாவின் சாட்சிகள் மதபிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் இந்திய தேசியப் பண்ணைப் பாடாமல் இருந்தனர். 1985ல் இவ்விசயம் கேரள சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர்கள், மாநில கல்வி அதிகாரியின் உத்தரவின்படி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதியரசர் கல்வி அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தார். 1987ல் கீழ்மட்ட நீதிமன்றங்களைக் கடந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தீர்ப்பு தொகு

உச்ச நீதிமன்றம் இவ்வுத்திரவை மாற்றி, அம்மூன்று மாணவர்களை அந்த பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டது. பின்பு இரு நீதியரசர் கொண்ட நீதி பீடம் இதனை உறுதி செய்தது. தேசிய கீதத்தில் எந்த ஒரு மத உணர்விற்கும் எதிரான சொல்லோ கருத்தோ இல்லை என்பதே உயர் நீதிமன்றத்தின் கருத்து. எனவே, தேசிய கீதத்தை பாடுவது மதச்சுதந்திரத்திற்கு மாறானது என்னும் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஆனால் உச்ச நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 51-அ-வின் மற்றும் தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 படி குடிமக்கள் மீது தேசிய குறிக்கோட்கள், நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தின் மீது மதிப்பு விதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளியில் மற்ற மாணவர்களுடன் தேசிய கீதத்தை பாடாமலிருப்பது அவமதிப்புக்கு ஈடாகும் என்பது சரியல்ல, என்று கருத்து தெரிவித்தது:

பிரிவு 25 மக்களின் மதப்பற்றைக் குறித்து, சிறுப்பான்மை வகுப்பினர்களையும் இந்திய அமைப்பு சட்டதிற்குள்ளிணைப்பதே ஒரு உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகும். யெகோவாவின் சாட்சிகள் என்னும் பிரிவைச் சார்ந்தவர்களின் நடைமுறைகள் அபூர்வமாக தோன்றினாலும், அது நீதிமன்றத்திற்கு ஏற்கத்தக்கதல்லதாக தோன்றினாலும், அந்நடைமுறை தக்க மதத்தின் கடைப்பிடிப்பிற்கு அவசியமா என்பதே சச்சரவாகும். அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்குட்பட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மதத்தினைக் பற்றிக்கொள்ளலாம். எனவே உண்மையாக தம்மதப்பற்றிற்கு தடங்கலாய் விளங்கும் ‌போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒத்தி வைத்தது.