புதூர், ஊத்தங்கரை வட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

புதூர் (Pudur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கொண்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

புதூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 307

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 3 கிலோமீட்டர் பாம்பாரு அணை இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 239 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 358, மொத்த மக்கள் தொகை 1548, இதில் 794 ஆண்களும், 754 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 66.9 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Pudur Village , Uthangarai Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்,_ஊத்தங்கரை_வட்டம்&oldid=3717152" இலிருந்து மீள்விக்கப்பட்டது