புத்தனேரி ரா. சுப்பிரமணியன்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்
ரா. சுப்பிரமணியன் கவிஞர், எழுத்தாளர், நாடகப் பாடலாசிரியர் எனப் பல்துறையில் திறமைகொண்ட தமிழறிஞராவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், புத்தனேரியில் இராமையா- தாயம்மாளுக்கு மகனாக 1922 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் நாளன்று பிறந்தார்.
தமிழ்ப் பணிகள் தொகு
இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெற்ற இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். டி. கே. எஸ் சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம், என். எஸ். கே போன்றவர்கள் இயற்றிய நாடகங்கள் பலவற்றிற்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.[1][2] செந்தமிழ்ச் செல்வி எனும் இலக்கிய இதழில் கௌரவ ஆசிரியராகவும் தமிழ் உலகம், குயில், போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இறப்பு தொகு
பல்துறை வித்தகராகிய சுப்பிரமணியன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாளன்று இறந்தார்.
படைப்புகள் தொகு
கவிதை நூல்கள் தொகு
- பொங்கல் விருந்து
- பாரதி ஒரு நெருப்பு
- அம்புலிப் பாட்டுப் பாடாதே
- அன்னை இந்திரா தியாக காவியம்
- என்றும் இளமை. உள்ளிட்ட பல
திறனாய்வு நூல்கள் தொகு
- பாட்டும் கூத்தும்
- பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள்
நாடகங்கள் தொகு
- பாரதி யார்?
- பிள்ளைப் பாண்டியன்
- தலை பிழைத்தது
- வீரப் பரம்பரை
- பிறந்தது புதுயுகம்
தொகுப்புப் பணிகள் தொகு
- நாடகக் கலைக்களஞ்சியம்
- பண் ஆராய்ச்சி
- மகாகவி மலர்
- கிராமியக் கலைவிழா மலர்
பெற்ற விருதுகள் தொகு
- கவிஞர்கோ(1972)
- கலைமாமணி(1976)
- செஞ்சொற் கவிஞர்(1979)
- முத்தமிழ் வித்தகர்(1977)
- புதுமைப் பாவலர்(1980) முதலான பல விருதுகள் பெற்றுள்ளார்.[3]