புள்ளன் வரகுண வர்மன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் படைத்தலைவனாகவிருந்தான். நக்கன் என்பவனின் மகனான இவன் பராந்தகப் பள்ளி வேளாண் என்ற பட்டத்தினைப் பெற்றவனும் ஆவான். இடவைப்போர் வெற்றிக்குப் படையெடுத்தவன், திண்டுக்கல்லுக்கு அருகில் இராமநாதபுரத்தில் குளம் அமைத்தான் என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

சான்றுகள் தொகு

  1. பதிப்பு: வீ. அரசு. "பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு". மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம். இளங்கணி பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளன்&oldid=2336374" இலிருந்து மீள்விக்கப்பட்டது