பூர்ணையா (Purnaiah) (1746 - 1812 மார்ச் 27) கிருட்டிணாச்சார்ய பூர்ணையா அல்லது மிர் மீரான் பூர்ணையா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய நிர்வாகியும், அரசியல்வாதியும் மற்றும் மைசூர் அரசின் முதல் திவானும் ஆவார். இவருக்கு ஐதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் மூன்றாம் கிருட்டிணராச உடையார் ஆகிய மூன்று மன்னர்களின் கீழ் பணி புரியும் வாய்ப்பு இருந்தது. இவர் 1782 முதல் 1811 வரை மைசூர் அரசில் திவானாக ஆட்சி செய்தார். இவர் கணக்கியல், நினைவாற்றல் மற்றும் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். திப்பு சுல்தானின் கீழ் பணியாற்றும் போது போர்க்கால இராணுவத் தளபதியாகவும் இருந்தார். திப்பு சுல்தானின் தோல்விக்குப் பிறகு, மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1799 முதல் 1810 வரை பூர்ணையாவிடம் கல்வி கற்றார் .( இளவரசனின் மூன்று வயதில்). இவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆங்கில பிரநிதியுடன் மைசூர் அரசில் திவானாக ஆட்சி செய்தார்.

Mir Miran
கிருட்டிணாச்சார்ய பூர்ணையா
ஐரிசு ஓவியர் தாமசு இக்கி வரைந்த மைசூரின் திவான் பூர்ணையாவின் ஓவியம்
மைசூர் அரசின் முதல் திவான்
பதவியில்
1782 திசம்பர் – 1799 மே
ஆட்சியாளர்கள்ஒன்பதாம் சாமராச உடையார்
திப்பு சுல்தான்
பதவியில்
1799 சூன் 30 – 1811 திசம்பர் 23
ஆட்சியாளர்மூன்றாம் கிருட்டிணராச உடையார்
பின்னவர்பார்கீர் பக்சி பாலாஜி ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபொ.ச 1746
கோயம்புத்தூர்
இறப்பு1812 மார்ச் 27
ஸ்ரீரங்கப்பட்டணம்
வேலைAdministrator
இப்போது ஒரு அருங்காட்சியகமான ஏலாந்தூரில் பூர்ணையாவால் கட்டப்பட்ட குடியிருப்பு.

ஆரம்ப ஆண்டுகள் மற்றும் உயர்வு தொகு

பூர்ணையா ஒரு மரபுவழி தேசஸ்த் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவராவார்.[1][2][3][4] இவர் பொ.ச. 1746 இல் பிறந்தார். இவர் தனது பதினொரு வயதில் தந்தையை இழந்தார். மேலும் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக வேலை தேட வேண்டியிருந்தது. இவர் ஒரு வர்த்தகரின் கடையில் கணக்குகள் எழுதத் தொடங்கினார். இந்த மளிகை கடைக்காரர் அன்னதான செட்ட்டி என்ற பணக்கார வணிகருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர் ஐதர் அலியின் அரண்மனை மற்றும் இராணுவத்திற்கு மளிகை பொருட்களை வழங்கி வந்தார்.

கணக்கியல் மற்றும் சிறந்த கையெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த காரணத்தால் பூர்ணையா மிக விரைவில் ஐதர் அலியின் நம்பிக்கையைப் பெற்றார். அற்புதமான நினைவாற்றல், பல மொழிகளில் தேர்ச்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்ட பூர்ணையா கணக்குத் துறையின் தலைவராகவும், ஆட்சியாளரின் நம்பிக்கைக்குரியவராகவும் ஆனார்.

கன்னடம் (தாய்மொழி), சமசுகிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் பூர்ணையா சரளமாக இருந்தார். இவருக்கு ஆங்கிலம் புரிந்தது. ஆனால் மொழியைப் படிக்கவோ எழுதவோ முடியவில்லை.

திப்புடன் தொகு

1782 ஆம் ஆண்டில், சித்தூர் அருகே அதர் அலி இறந்தபோது, திப்பு மலபார் கடற்கரையில் முகாமிட்டிருந்தார். பூர்ணையா ராஜாவின் மரணத்தை ரகசியமாக வைத்திருந்தார். மேலும் இந்தத் தகவலை திப்புவுக்கு விரைவாக அனுப்பினார். ஐதரின் மரணச் செய்தியை ரகசியமாக வைத்திருப்பதில் பூர்ணையா முக்கிய பங்கு வகித்தார். ஏனெனில் பல விரோதிகள் இந்த இறப்பைப் பயன்படுத்தி சிம்மாசனத்தைக் கைப்பற்ற முயற்சித்திருக்கலாம். இவ்வாறு திப்புவின் வாரிசுக்கு பூர்ணையா வழி வகுத்தார். பின்னர், திப்புவின் அமைச்சரவையில் பூர்ணையா உறுப்பினரானார்.[5]

திப்பு சுல்தான் தலைமையிலான ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளிலும் பூர்ணையா கலந்து கொண்டார். 1792 ஆம் ஆண்டின் மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போரில், பூர்ணையா ஒரு ராக்கெட் பிரிவுகளுக்கு (131 ஆண்கள்) பொறுப்பாக இருந்தார்.[6] பிரிட்டிசாருடனான தனது கடைசிப் போரில், திப்பு தனது மூத்த மகனை, பூர்ணையாவிடம் ஒப்படைத்திருந்தார். நான்காவது ஆங்கிலேய-மைசூர் போரில், சுல்தான்பேட்டை தோப்பு போர் உள்ளிட்ட சில போர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூர் படைகளுக்கு பூர்ணையா தலைமை தாங்கினார். திப்பு 1799 இல் போர்க்களத்தில் இறந்தார்.

ஆங்கிலேயர்களுடன் சந்திப்பு தொகு

 
ஸ்ரீரங்கப்பட்டணத்திலுள்ள ஹாரிசு பிரபுவின் குடியிருப்பு. பின்னர் பூர்ணையாவின் இல்லமானது
 
ஹாரிசு பிரபுவின் இல்லத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டு

திப்புவின் மரணத்திற்குப் பிறகு நிர்வாகம் கிட்டத்தட்ட சரிந்துவிட்டது. திறமையான இராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை சரிசெய்ய பூர்ணையா ஹாரிசு பிரபுவை சந்திக்க விரும்பினார். அவர் பூர்ணையாவின் அரசியல் புத்திசாலித்தனம், முதிர்ச்சி மற்றும் அச்சமின்மை ஆகியவற்றால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

ஆங்கிலேயர்கள் பூர்ணையாவை நம்பி, புதிதாக உருவாக்கப்பட்ட மைசூர் மாநிலத்தின் முதல் திவானாக பூர்ணையாவை நியமித்தனர். ஆட்சியாளரான இராணி லட்சம்மன்னி உடனடியாக இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டார். உடனடியாக மைசூரின் வருடாந்திர வருவாயை அதிகரித்ததால் 1807 திசம்பர் 27 அன்று ஒரு சிறப்பு தர்பாரில் மைசூர் மகாராஜாவால் ஏலாந்தூரின் வரி வசூலிக்கும் உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிசு அரசப்பிரதிநிதி சர் ஜான் மால்கம் மற்றும் கிழக்கிந்திய நிறுவனம் பூர்ணையா ஓய்வு பெற்றபோது குதிரை, யானை ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர்.[7]

1810இல் கிருட்டிணராஜா உடையாருக்கு உரிய வயது வந்தவுடன், பிரிட்டிசு அரசப்பிரதிநிதியான ஏ. எச். கோலுடன் கலந்துரையாடிய பின்னர், அரசின் தலைமுடி திவான் பூர்ணையாவிலிருந்து மன்னருக்கு மாற்றப்பட்டது. பூர்ணையா 1811இல் அரசுப் இருந்து ஓய்வு பெற்றார்.

1811 ஆம் ஆண்டில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பூர்ணையா, ஸ்ரீரங்கப்பட்டணத்திலுள்ள ஹாரிசு பிரபுவின் குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்தார். பூர்ணையா 1812 மார்ச் 28 அன்று இறந்தார்.[7]

உடையார்களுடன் தொகு

 
பெங்களூரில் பூர்ணையாவின் சந்ததியினரின் வீடு [8]

பூர்ணையாவின் முதல் அக்கறை சட்டம் ஒழுங்கின் மேல் இருந்தது. சர்வாதிகாரிகளாக மாறிய கிளர்ச்சியடைந்த பாளையக்காரர்களை இவர் அடக்கினார். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பிறகு மடங்கள், கோயில்கள் மற்றும் தர்காக்களுக்கு ஆங்கிலேயர்களால் நிறுத்தி வைத்திருந்த தொகைகளை அளிக்கத் தொடங்கினார். மக்களின் புகார்களுக்காக இவர் நீதித்துறையை நிறுவினார்.

இவரது பொதுப்பணித்துறை ஒரு பெரிய பாரம்பரியத்தை ஏற்படுத்தியது. மைசூருக்கு குடிநீர் வழங்க சுமார் ஒன்பது மைல் தூரக் கால்வாய் வெட்டப்பட்டது. பல குளங்கள் தோண்டப்பட்டன. இந்தியத் தலைமை ஆளுநர் வெல்லசுலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கல் பாலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தை கிராங்கூருடன் இணைக்கும் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது .[9] இது கடந்த இருநூறு ஆண்டுகளாக நிற்கிறது.

மைசூர் மகாராஜா என்ற பெயரில் ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டன, ஆனால் மக்கள் அவற்றை "திவான் பூர்ணையாவின் சத்ரங்கள்" என்று அழைத்தனர். அவை எல்லா பயணிகளுக்கும் கிடைத்தன.

பூர்ணையாவின் ஆட்சியில் வருவாய் நிர்வாகம் நெறிப்படுத்தப்பட்டது. மைசூர் மாநிலம் இடைவிடாத மோதல்களுடன் ஒரு கொந்தளிப்பான எல்லையைக் கொண்டிருந்தது. முறையான நில அளவீடுகள் நடத்தப்பட்டன. எல்லைகள் அறிவிக்கப்பட்டன.

மாநிலத்திற்கான ஒலி நிர்வாக இயந்திரங்களுக்கு அடித்தளம் அமைத்ததற்காக பூர்ணையா நினைவுகூரப்படுகிறார். மைசூர் பிரிட்டிசு இந்தியாவில் முதன்மையான முற்போக்கான பூர்வீக மாநிலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. Western colonial policy: a study on its impact on Indian society. Institute of Historical Studies. 1981. p. 257.
  2. India, Modernity and the Great Divergence: Mysore and Gujarat (17th to 19th C.). BRILL. p. 359.
  3. The Quarterly Journal of the Mythic Society (Bangalore)., Volume 72. The Society. 1981. p. 182.
  4. Explorations in the Deccan History. Pragati Publications. 2006. p. 105.
  5. Seringapatam. H. Milford.
  6. [1] பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம், Page 5 of Rockets in Mysore and Britain, 1750-1850 A.D.
  7. 7.0 7.1 Parsons, Constance E (1931). Seringapatam. H. Milford. pp. 155–157. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  8. Heritage building
  9. [2] பரணிடப்பட்டது 2011-08-09 at Archive.today, Wellesley Bridge Pictures.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூர்ணையா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணையா&oldid=3926713" இலிருந்து மீள்விக்கப்பட்டது