பெருமிதப் பேரணி

பெருமிதப் பேரணிகள் (Pride parade) அல்லது வானவில் பேரணி என்பது அகனள், அகனன், ஈரர், திருனர் மற்றும் பாலிருமை முறையில் சேராத பாலின-பாலீர்ப்பினர்கள் (LGBTQ) ஆகியோரின் உரிமைகளை வலியுறுத்தியும் ஆதரவு தெரிவித்தும் அவர்கள் பண்பாட்டையும் பெருமையையும் கொண்டாடும் நிகழ்வுகள் ஆகும். பெரும்பாலான வானவில் பேரணிகள் ஆண்டு தோறும் நாட்டின் பெருநகரங்களில் நடைபெறுகின்றன. பெரும்பாலும், இவை ஸ்டோன்வால் கலவரங்களை நினைவுகூறும் வண்ணம் சூன் மாதத்தில் ஒழுங்குசெய்யப்படுகின்றன.[1]

மதுரையில் நடைபெற்ற ஆசியாவின் முதல் பெருமிதப் பேரணி. இப்பேரணியில் கலந்துகொண்ட அஞ்சலி கோபாலன்

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் வானவில் பேரணிகள் நடைபெறுகின்றன. புதுச்சேரியிலும் வானவில் பேரணிகள் நடந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Wythe, Bianca (June 9, 2014). "How the Pride Parade Became Tradition". PBS. பார்க்கப்பட்ட நாள் July 9, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமிதப்_பேரணி&oldid=3275854" இலிருந்து மீள்விக்கப்பட்டது