பேச்சு:தீர்த்தத்தொட்டி சித்திர புத்திர நாயனார் கோயில்
கேள்வி தொகு
சித்திர புத்திர நாயனார் எப்போ எப்படி "சித்திர புத்திர நயினார்" ஆனார்?--Kanags \உரையாடு 20:03, 23 மார்ச் 2010 (UTC)
சித்திர புத்திர நயினார் ஒரு கடவுளாக உருவானவர். இவர் எமனிடம் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் கடவுளாக இருப்பதாகத்தான் புராணக்கதைகள் சொல்கின்றன. இவர் 63 நாயன்மார்கள் பட்டியலில் இருக்கிறாரா? இவருக்கு நாயன்மார் என பெயர் வர வாய்ப்பில்லை... சித்திர புத்திர நயினார் என்பதே சரியானது. --Theni.M.Subramani 01:30, 24 மார்ச் 2010 (UTC)
- இவர் அறுபத்து மூவரில் ஒருவரோ நானறியேன். ஆனால் இவரை நாயனார் என்றே எமக்கு ஈழத்தில் சொல்லித்தரப்பட்டது. தமிழகத்தில் நயினார் என்கின்றனரோ தெரியாது. அது இருக்க, இந்தக் குறிப்பிட்ட கோயில் சித்திர குப்த நாயனார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. பார்க்க: [1].--Kanags \உரையாடு 09:00, 24 மார்ச் 2010 (UTC)
- தாங்கள் குறிப்பிட்ட பக்கத்தைப் பார்த்தேன். நானும் கட்டுரையில் நயினார் என்றிருந்த இடங்களை நாயனார் என்று மாற்றம் செய்து விட்டேன். பக்கத்தையும் நகர்த்தி விடுகிறேன். தவறைத் திருத்த வழிகாட்டியமைக்கு நன்றி.--Theni.M.Subramani 10:27, 24 மார்ச் 2010 (UTC)