பேச்சு:முள்ளிவாய்க்கால்

நினைவுக்காக தொகு

ஒரு பதிவுக்காகச் சில சொற்களை இங்கு இடுகிறேன். இரண்டு நாட்களாய் முள்ளிவாய்க்காலில் இருக்கிறேன். அல்லாஹ் நாடினால் இன்னும் இரண்டு வாரங்கள் இங்குதான் இருக்கப் போகிறேன். நந்திக்கடல் களப்பினூடாக வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியைத் தாண்டிய பின்னிருக்கும் கரையமுள்ளிவாய்க்கால் என்று கூறப்படும் பகுதியே இதன் அழகிய கடற்கரை உள்ள பகுதி. இதிலிருக்கும் இலங்கை இராணுவத் தளத்திலேயே தங்கியிருக்கிறேன். கடற்காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. இவ்விடத்தின் அழகும் நாள் தோறும் வீசிக் கொண்டிருக்கும் நல்ல குளிர் காற்றும் உள்ளத்துக்கு நிறைவைத் தந்து கொண்டிருக்கின்றன. பெரும் போர் நடந்து பலர் மாண்ட இடமாக இருந்தாலும் இவ்விடத்தின் இயற்கையழகு இதமாக இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 16:22, 19 சனவரி 2021 (UTC)Reply

Return to "முள்ளிவாய்க்கால்" page.