போடி அலக் கான்

போடி அலக் கான் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககானாவார். இவர் 1519 - 1547இல் ஆட்சி புரிந்தார்.

இவர் துர்போலத்தின் மூத்த மகன் ஆவார். இவர் தன் பாட்டன் தயன் கானால் கான் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், தயன் கானின் இறப்பிற்குப் பிறகு தயன் கானின் மூன்றாவது மகன் பர்ஸ் போலுட் சினோங் பெரிய கானாகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். போலுட் கான் மிகவும் இளையவராக இருப்பதாகவும், பெரிய மங்கோலியப் பேரரசை ஆட்சி செய்யச் சிறிதும் அனுபவமற்றவராக இருப்பதாகவும் கூறித் தன்னைக் கான் என்று அறிவித்துக் கொண்டார். சண்டை, ஒன்றிணைப்பு மற்றும் செழிப்பு ஆகியவை இறுதியாக தயன் கானின் ஆட்சியின் போது அடையப்பட்ட பிறகு அவை இழக்கப்படலாம் என்ற பயம் மங்கோலிய மக்களில் சிலர் இடையே இருந்தது. ஒரு மிகுந்த அனுபவமுடைய தலைவர் தேவை என்று அவர்கள் எண்ணினர். இதன் காரணமாகப் பர்ஸ் போலுட் தனக்கான ஆதரவைத் திரட்ட முடிந்தது.

போடி அலக் கான் என்றுமே அதிகாரப் பூர்வமாகத் தன்னுடைய கான் பட்டத்தைத் துறக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தயனின் நான்காவது மகன் அலக் கானுடன் இணைந்தார். கான் மகுடத்திற்கு பர்ஸ் போலுட் சினோங்கிற்குச் சவால் விடுக்கத் தேவையான சக்தியுடையவராக போடி அலக் கான் உருவானார். எனினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தயன் கானின் நான்காவது மகனான தன்னுடைய சித்தப்பாவுடன் போடி அலக் கான் கூட்டணி வைத்தார். பர்ஸ் போலுட் சினோங்கின் ஆட்சிக்குச் சவால் விடுத்தார். சொந்த மங்கோலியர்கள் மத்தியில் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக ஒரு முடிவுக்கு இரு பிரிவினரும் வந்தனர். பர்ஸ் போலுட் சினோங் மகுடத்தைக் கைவிடுவார், போடி அலக் கான் மங்கோலியர்களின் புதிய பெரிய கானாவார் என்ற முடிவுக்கு வந்தனர். அதே நேரத்தில் போடி அலக் கானின் மகன்களும் வெவ்வேறு கான்களாகப் பெயரிடப்பட்டனர். எனினும், மங்கோலியர்களின் பெரிய கான் மகுடத்தை இழந்தது பர்ஸ் போலுட்டுக்கு மிகுந்த இழப்பாக இருந்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே இவர் 1547இல் இறந்து விட்டார். இவருக்குப் பிறகு இவரது மூத்த மகன் தரைசுங் குதேன் கான் ஆட்சிக்கு வந்தார்.

உசாத்துண தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடி_அலக்_கான்&oldid=3638398" இலிருந்து மீள்விக்கப்பட்டது