மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, ஜனவரி 12, 1917 - பெப்ரவரி 5 2008), ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[1], மெக்சிக்கோ[2], ஐக்கிய இராச்சியம்[3], சீனா[4] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன[1].

மகரிஷி மகேஷ் யோகி
Maharishi Mahesh Yogi
பிறப்புஜனவரி 12, 1917
ஜபல்பூர்,  இந்தியா
இறப்புபெப்ரவரி 5, 2008(2008-02-05) (அகவை 91)
விலோட்ராப்,  நெதர்லாந்து
பெற்றோர்தந்தை: சிறீராம் பிரசாத்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி[5], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.

மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[6]. 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.

1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[7].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Gifts of the Global Country of World Peace
  2. "Rundschau". Archived from the original on 2008-05-01. பார்க்கப்பட்ட நாள் 2008-05-21.
  3. Maharishi School UK
  4. 1-888-LEARN TM (888-532-7686)
  5. http://www.srigurudev.net/srigurudev/gurudev/biography.html
  6. Oates, Robert M. Celebrating the Dawn, page 40. New York: G.P. Putnam's Sons. ISBN 0-399-11815-2.
  7. The New York Times
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_யோகி&oldid=3566045" இலிருந்து மீள்விக்கப்பட்டது