மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம்
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Tobacco Research Institute) என்பது 1947ஆம் ஆண்டு இந்திய மத்திய புகையிலை குழுவின் சென்னையினால் நிறுவப்பட்ட ஆராய்ச்சி மையமாகும். [1] இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் 1965ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் செயல்பாட்டினை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமகேந்திரவரத்தில் அமைந்துள்ளது. [2]
Other name | CTRI |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1945 |
சார்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் |
பணிப்பாளர் | டி. தாமோதர் ரெட்டி |
நிருவாகப் பணியாளர் | 300 |
அமைவிடம் | , , இந்தியா 16°59′N 81°47′E / 16.98°N 81.78°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | ctri |
வரலாறு தொகு
1945ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆராய்ச்சி செயல்பாடுகள் உற்பத்தியினை மேம்படுத்த இந்திய மத்திய புகையிலை குழுவினை அமைத்தது. இந்தியாவில் புகையிலை ஆராய்ச்சி நடவடிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் புகையிலை உற்பத்தியை மேம்படுத்த இந்நிறுவனம் 1947 இல் நிறுவப்பட்டது. பின்னர் நிறுவனப் பணிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மேற்கொண்டது.
பிரிவுகள் தொகு
- இந்த நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர், கண்டுகூர் மற்றும் ஜீலுகுமில்லி, கர்நாடகத்தில் அன்சூர், தமிழ்நாட்டில் வேடசந்தூர், மற்றும் மேற்கு வங்கத்தின் தின்ஹாட்டா என் ஆறு இடங்களில் மண்டல நிலையங்களை அமைத்துள்ளது.
- பர்லி புகையிலை ஆராய்ச்சி மையம் ஆந்திரப்பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவடம் கலவச்சர்லாவில் அமைந்துள்ளது .
மேற்கோள்கள் தொகு
- ↑ "केंद्रीय तंबाकू अनुसंधान संस्थान में 12वीं पास के लिए क्लर्क के पद पर वैकेंसी". NDTVIndia. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
- ↑ "director central tobacco research institute: Latest News & Videos, Photos about director central tobacco research institute | The Economic Times - Page 3". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.