மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில்

காரணீசுவரர் கோயில் (Mylapore Karaneeswarar Temple) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். மயிலாப்பூரில் உள்ள சப்த சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், சென்னை
பெயர்
பெயர்:மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், சென்னை
அமைவிடம்
ஊர்:மயிலாப்பூர்
மாவட்டம்:சென்னை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காரணீஸ்வரர்
தாயார்:சொர்ணாம்பிகை

சப்த சிவத்தலங்கள் தொகு

மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.[1] இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[2]

இறைவனும் இறைவியும் தொகு

இங்குள்ள சிவலிங்கத் திருமேனி, திருக்கடையூர் மற்றும் காளஹஸ்தி தலங்களில் உள்ள சதுர வடிவ லிங்கத் திருமேனி போல் காட்சியளிக்கிறது. இங்குள்ள சிவனின் பெயர் காரணீஸ்வரர் ஆவார்.[3] இறைவி சொர்ணாம்பிகை ஆவார். இக்கோயில் அருகில் மாதவப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது.[4]

திறந்திருக்கும் நேரம் தொகு

இக்கோயில் மயிலாப்பூரில் பஜார் சாலையில் உள்ளது. காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும்.[3]

மேற்கோள்கள் தொகு