மரே பர்ன்சன் எமெனோ (Murray Barnson Emeneau) ( பிப்ரவரி 28, 1904 – ஆகத்து 29, 2005) அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலியில் மொழியியல் துறையை நிறுவிய பேராசிரியர் ஆவார்,[1] இவர் ஓர் இந்தியவியலாளர் ஆவர். இவர் அதிகம் அறியப்படாத, இலக்கிய வளம் குறைந்த திராவிட மொழிகளைக் கற்றார். தோடா, படகா, கோலாமி ஆகிய மொழிகள் தொடர்பாகவும், தமிழ், சமற்கிருதம் தொடர்பாகவும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இளம்பருவமும் கல்வியும் தொகு

எமெனோ கனடாவின் நோவா இசுகோட்டியா மாநிலத்தின் இலுனன்பேர்கு நகரத்தில் பிறந்தார். பள்ளியில் படித்தபோதே செம்மொழிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தல்ஃகவுசி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[2] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பல்லியோல் கல்லூரியில் இளங்கலை பயின்றார். பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் இலத்தீன் மொழியைக் கற்பித்தார். அங்கே சமற்கிருதத்தையும் பிற இந்திய ஐரோப்பிய மொழிகளைப் படிக்கத் தொடங்கினார். யேல் பல்கலைக்கழகத்தில் இருந்த போது சமற்கிருதத்தை கற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Professor Murray Emeneau Remembered". Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  2. Bright, William (June 2006). "Murray B. Emeneau: 1928-2006". Language 82 (2): 411–422. doi:10.1353/lan.2006.0080. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரே_எமெனோ&oldid=3566695" இலிருந்து மீள்விக்கப்பட்டது