மறைமலை அடிகள் பாலம்

சென்னையில் உள்ள ஒரு பாலம்

மறைமலை அடிகள் பாலம் (முன்பு மர்மலாங் பாலம் ) என்பது, அண்ணாசாலையில் அமைந்துள்ள, அடையாறு ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் சாலைப் பாலமாகும்.[1]

மர்மலாங் பாலம், முன்புறத்தில் ஒரு சிப்பாய் மற்றும் பூர்வீக குடிகள், 1783, வில்லியம் ஹாட்ஜஸ், பிரித்தானிய கலைக்கான யேல் மையம்

வரலாறு தொகு

அடையாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த மிகப் பழமையான மர்மலாங் பாலம், ஆர்மீனிய வணிகரான கோஜா பெட்ரஸ் உஸ்கான் (ஆங்கிலம்: Coja Petrus Uscan) என்பவரால் 1728 ஆம் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அருகில் உள்ள மாம்பலம் கிராமத்தின் பெயரால் இந்தப் பாலம் பெயரிடப்பட்டது. இது மர்மலான் அல்லது மர்மலாங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது.[1] இந்தப் பாலம் பழுதடைந்தததால் 1966 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது.[2] புதிய பாலத்திற்கு தமிழாசிரியரும், தூய தமிழ் இயக்கத்தின் ஆதரவாளருமான மறைமலை அடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டிய பாலத்தின் வடக்கு முனையில் உஸ்கான் பாலம் கட்டியதை நினைவு கூரும் விதமாக ஒரு பெயர்பலகை காணப்படுகிறது.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Diwan Bahadur S. E. Runganadhan, ed. (1939). Madras Tercentenary Celebration Committee Commemoration Volume. Indian Branch, Oxford Press. p. 124.
  2. Frederick, Prince (1 July 2009). "Memories of Madras: From Saidapet to Madras". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090808054807/http://www.hindu.com/mp/2009/07/01/stories/2009070150200100.htm. 

பிற ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைமலை_அடிகள்_பாலம்&oldid=3925520" இலிருந்து மீள்விக்கப்பட்டது