மலாயா தொடருந்து நிறுவனம்
மலாயா தொடருந்து நிறுவனம், (மலாய்: Keretapi Tanah Melayu Berhad ஆங்கிலம்: Malayan Railways Limited; ஜாவி: كريتاڤي تانه ملايو برحد); என்பது மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மைத் தொடருந்து நிறுவனம் ஆகும்.
மலாயா தொடருந்து நிறுவனம் Keretapi Tanah Melayu | |
---|---|
குறியீடு | கே.டி.எம்.பி KTMB |
இடம் | தீபகற்ப மலேசியா |
இயக்கப்படும் நாள் | 1885–நடப்பில் |
இரயில் பாதை | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) |
மின்மயமாக்கம் | 25 கிலோ வாட் (50 Hz) |
நீளம் | 2,783 km (1,729 mi)] |
தலைமையகம் | கோலாலம்பூர் |
வகை | அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்; மலேசிய நிதி அமைச்சர் |
---|---|
நிறுவுகை | 1992 |
தலைமையகம் | ஜாலான் சுல்தான் இசாமுதீன், 50621 கோலாலம்பூர், மலேசியா Jalan Sultan Hishamuddin, 50621 Kuala Lumpur, Malaysia |
முதன்மை நபர்கள் | முகமது ராணி இசாம் சம்சுதீன், தலைமை நிர்வாக அதிகாரி |
சேவைகள் |
|
கிரேத்தாப்பி தானா மெலாயு (Keretapi Tanah Melayu Berhad) என்று அழைக்கப்படுவதும் உண்டு. பரவலாக கே.டி.எம். (KTM) என்றே அழைக்கிறார்கள்.
இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காகக் கட்டமைக்கப்பட்டது.
முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (Federated Malay States Railways) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம் (Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.
1962-ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயரான கிரேத்தாப்பி தானா மெலாயு என்று (சுருக்கமாக கே.டி.எம்.) அழைக்கப் படுகின்றது. 1992-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசாங்கத்தின் அரசுடைமைத் தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ "KTM Berhad". Transport Malaysia.