மழைக்காலமும் குயிலோசையும் (நூல்)

மழைக்காலமும் குயிலோசையும் என்பது சு. தியடோர் பாஸ்கரனால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு காட்டுயிர்க் கட்டுரை நூல். இவர் மா. கிருட்டிணனின் காட்டுயிர் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலி்ல் மா. கிருட்டிணனின் தமிழகத்தில் காணப்படும் பறவைகள், விலங்குகளைப் பற்றிய கட்டுரைகளும் கோட்டோவியங்களும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலி்ல் அன்றைய தமிழகத்தில் வழங்கப்பட்ட தமிழ்ப் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன.