மாரி சன்னா ரெட்டி
இந்திய அரசியல்வாதி
மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.[1]
டாக்டர். மாரி இச்சன்னா ரெட்டி | |
---|---|
12வது தமிழ்நாடு ஆளுநர் | |
பதவியில் 31 மே 1993 – 2 திசம்பர் 1996 | |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி |
முன்னையவர் | பீஷ்ம நாராயண் சிங் |
பின்னவர் | கிரிஷன் காந்த் (கூடுதல் பொறுப்பு) |
11வது இராஜஸ்தான் ஆளுநர் | |
பதவியில் 5 பெப்பிரவரி 1992 – 31 மே 1993 | |
முதலமைச்சர் | பைரோன் செகாவத் |
முன்னையவர் | சுவரூப் சிங் (செயல்) |
பின்னவர் | தனிக் லால் மண்டல் (கூடுதல் பொறுப்பு) |
6வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 3 திசம்பர் 1989 – 17 திசம்பர் 1990 | |
ஆளுநர் | குமுத்பென் ஜோஷி கிரிஷன் காந்த் |
முன்னையவர் | என். டி. ராமராவ் |
பின்னவர் | நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி |
பதவியில் 6 மார்ச்சு 1978 – 11 அக்டோபர் 1980 | |
ஆளுநர் | சாரதா முகர்ஜி கே .சி. ஆப்ரகாம் |
முன்னையவர் | ஜலகம் வெங்கல ராவ் |
பின்னவர் | தங்குதுரி அஞ்சய்யா |
12வது பஞ்சாப் ஆளுநர் | |
பதவியில் 21 ஏப்பிரல் 1982 – 7 பெப்பிரவரி 1983 | |
முதலமைச்சர் | தர்பாரா சிங் |
முன்னையவர் | அமினூதின் அகமது கான் |
பின்னவர் | சுர்சித் சிங் சந்தவாலியா |
16வது உத்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 25 அக்டோபர் 1974 – 1 அக்டோபர் 1977 | |
முதலமைச்சர் | ஹேம்வதி நந்தன் பஹுகுணா நா. த. திவாரி ராம் நரெஷ் யாதவ் |
முன்னையவர் | ஏ.ஏ.கான் |
பின்னவர் | கண்பத் ராவ் தேவ்ஜி தபஸ் |
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தந்தூர் சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 1962–1972 | |
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் விகராபாத் சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 1957–1962 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சனவரி 1919 பெத்தமங்கலாரம் கிராமம், மொய்னாபாத், ரங்கா ரெட்டி மாவட்டம், அட்ராஃப்-இ-பால்டா, ஐதராபாத் இராச்சியம் (தற்போதய தெலங்காணா, இந்தியா) |
இறப்பு | 2 திசம்பர் 1996 ஐதராபாத்து | (அகவை 77)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாரி சாவித்திரி தேவி |
பிள்ளைகள் | 4; மறைந்த மாரி கிருஷ்ணா ரெட்டி, மாரி ரவீந்திர ரெட்டி, மாரி சசிதர் ரெட்டி, கொத்தப்பள்ளி வசுதா ரெட்டி |
1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர். இவர் தமிழக ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் ஆளுநர் - முதல்வரின் கருப்புப் பக்கங்கள் என குறிப்பிடப்படுகிறது.
மேற்சான்றுகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.